Breaking
Fri. Apr 19th, 2024
அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர் ஐ.எல்.எம்.றபீக், இன்று (28) நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹீர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.
 
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை கட்சிக் காரியாலயத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்வில், புதிய உறுப்பினர் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.
 
இந்நிகழ்வில், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழு தலைவருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்சில், மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச மத்திய குழு செயலாளர் ஏ.எம்.இர்பான், அட்டாளைச்சேனை அமைப்பாளர் ஏ.கே.அமீர், பாலமுனை மத்திய குழு செயலாளர் பாயிஸ் ஆசிரியர் மற்றும் அட்டாளைச்சேனை பலநோக்கு கூட்டுறவு சங்கத் தலைவர் எஸ்.எல்.பசீல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 
மேலும், இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.எல்.எம். ஹனீபா மதனி ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
 
 

Related Post