Breaking
Thu. Apr 18th, 2024

47 வது, 48 வது, 49 வது வேலைத்திட்டங்கள்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், பாராளுமன்ற உறுப்பினரும், திருமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின்,  திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தில், தம்பலகாமம் பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களான தாலிப் ஹாஜியார், ரெஜீன், வட்டாரக் குழுத் தலைவர் ஆபிலூன், ரபீக் வேண்டுகோளுக்கிணங்க திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூபினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

47 வது வேலைத்திட்டம் – ஈச்ச நகர் பிரதான வீதி, 01 மில்லியன் ரூபாவில் கொங்ரீட் வீதியாகவும்

48 வது வேலைத்திட்டம் – சிறாஜ் நகர் மையவாடி, 01 மில்லியன் ரூபா நிதியில் சுற்று மதில் அமைக்கவும் .
49 வது வேலைத்திட்டம் – அப்துல் மனாப் வீதி, 01 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் கொங்ரீட் வீதிகளாக புனரமைக்கும் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில், தம்பலகாமம் பிரதேச சபை உறுப்பினர்களான தாலிப் ஹாஜியார், ரெஜீன், வட்டாரக் குழுத் தலைவர் ஆபிலூன், ரபீக் உட்பட பிரதேச பிரமுகர்கள் பலர் கலந்துசிறப்பித்தனர்.

(ன)

 

 

 

 

Related Post