Breaking
Wed. Apr 24th, 2024
அம்பாறை மாவட்டம் இலங்கையில் முஸ்லிம்கள்  அதிகமாக வாழும் ஒரு மாவட்டம் அந்த மாவட்டமே இலங்கை முஸ்லிம்களின் முதுகெலும்பாக இருக்கின்றது  அத்தோடு இலங்கை முஸ்லிம்களின் அரசியல் தலைமையை நிர்ணயம் செய்கின்ற ஒரு மக்கள் சக்தியாகவும் இருக்கின்றது 
பல வலுவான சக்திகளை கொண்ட அம்பாறை மாவட்டத்தில்  கடந்த 08/07/2018 ம் திகதி இலங்கை மக்களும் இலங்கை அரசியல்வாதிகளும்  ஆச்சரியம் அடைந்த  நிகழ்வாக அமைச்சர் றிசாத் அவர்கள் கலந்து கொண்ட  நிகழ்வுகள் இருந்தது அப்படி என்ன ஆச்சரியம் ? இது வரை காலமும் மக்கள் எதிர்பார்த்த பல சேவைகள் அமைச்சர் றிசாத் அவர்களால் ஆரம்பித்து வைத்த விடயம் அதில் தலைவர் அஸ்ரப் அவர்களின் மறைவுக்கு  பின் வீடு அற்ற ஏழைகளுக்கு  வீடுகள் வழங்க அம்பாறை மாவட்டத்தில் அதுவும் நிந்தவூரில்  அடிக்கல்  வைத்த ஒரு அரசியல்வாதி என்றால் அது சமுதாயத்தை ஏமாற்றும்  றவூப் ஹக்கிமும் அல்ல பிரதி அமைச்சர் பைசால் காசிமும் அல்ல சமுதாயத்துக்காக அரசியல் செய்யும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர்  அமைச்சர் றிசாத் அவர்கள் என்றுதான் கூற வேண்டும் அதனால் அம்பாறை மாவட்ட மக்கள் மனதில் அமைச்சர் றிசாத் அவர்கள் குடியிருக்கின்றார் என்பதை மக்கள் கூட்டம் சொல்கின்றது
முஸ்லிம்களின் பாதுகாவலன் என்று கூறும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கிம் அம்பாறை மாவட்ட மக்களை ஏமாற்றி வாக்குகளை சூரையாடி அவரும் அவரது சகாபாக்களும் சொகுசா வாழ்கின்றனரே தவிர இந்த அம்பாறை மாவட்ட மக்களின் வாழ்க்கைக்காக இது வரை ஒரு கழிவறை கூட கட்டி கொடுக்காத நிலையில் அமைச்சர் றிசாத் அவர்கள் வசதி குறைந்த ஏழை குடும்பங்களுக்கு பல நூறு வீடுகள் கட்டி கொடுக்க உள்ளார் அதற்கான ஆரம்ப அடிக்கல்லும் வைக்கப்பட்டது  என்ற செய்தியை  அம்பாறை மாவட்டமெங்கும் சந்திக்கு சந்தி மக்கள் புகழ்ந்து வரவேற்று பேசுவதை காணமுடிகிறது.
குறுகிய காலத்தில் அம்பாறை மக்களின் அவல நிலையை போக்க அமைச்சர் றிசாத் அவர்கள் வந்தாலும் அவரை  அதிக மக்கள் வரவேற்று  ஆதரவு வழங்கி வரும்  போது அந்த மக்களின்  தேவைகளை நிறைவேற்ற அமைச்சர் றிசாத் அவர்களுக்கு எதிர் தரப்பினரின் அரசியல் அதிகாரம் மிகவும் தடையாக இருந்ததை மிகவும் மனவேதனையுடன் கண்ணுற்ற அமைச்சர் றிசாத் அவர்கள்  அந்த தடையை உடைக்க அரசியல் தியாகம் ஒன்றை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது அதனால்  தேசியப்பட்டியல் பாராளுமன்ற பதவியை கலாநிதி V C இஸ்மாயில் அவர்களுக்கு வழங்கி தனது அரசியல் சானக்கியத்தால்   அம்பாறை மக்களுக்கு   அரசியல் அதிகாரத்தை  பெற்றுக்கொடுத்துள்ளார் இந்த மகிழ்ச்சியான செய்தியை பாராட்டும் நிகழ்வு பெரும் திறளான மக்கள் கலந்துகொண்ட மாபெரும் பொதுக்கூட்டம்  சம்மாந்துறை மண்ணில் நடைபெற்றது அதில் பல அரசியல்வாதிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
கடந்த காலங்களில் நடத்துனரும் நானே பஸ் சாரதியும் நானே என்ற அகங்காரத்துடன் அம்பாறை மாவட்டத்தில் அரசியல் செய்தவர்கள்  மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவோ அல்லது மக்கள்  நீண்ட காலமாக எதிர் நோக்கும் விவாசாய காணிகளின்  பிரச்சினைகளையோ கவனத்தில் கொள்ளலாமல் மண் கல் இரும்பு  அற்ற வீடு கட்ட வாழ்வாதார உதவி என்று மக்களுக்கு வழங்கிய சீமெந்து பக்கட்டுக்களால் எந்த நன்மையும் இல்லாத மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த அமைச்சர் றிசாத் அவர்கள் மேற்கொண்ட  வாழ்வாதார எழுச்சி மற்றும் கைத்தொழில் முயற்சிகளுக்கான உதவி என்பன அம்பாறை மாவட்ட பிரதேச மக்களுக்கு  கடந்த 08/07/2018 திகதி நிந்தவூர் மண்ணில்   வைத்து அமைச்சர் றிசாத் அவர்களால் வரிய குடும்பங்களுக்கு முதல் கட்டமாக கையளிக்கப்பட்டது  என்பது குறிப்பிடத்தக்கது.
மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களுக்கு பிறகு அம்பாறை மாவட்ட மக்கள் கண்ட ஒரு அரசியல்  முத்து அமைச்சர் றிசாத் அவர்கள் என்றுதான் கூற வேண்டும் ஏனென்றால் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றவூப் ஹக்கிம் அவர்கள்  செய்யாத சேவையை  அமைச்சர் றிசாத் அவர்கள் செய்து மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்துள்ளார் அதனால் எதிர் வரும் காலங்களில் அமைச்சர் றிசாத் அவர்களின் வழி காட்டலால் அம்பாறை மாவட்டம் பாரிய அபிவிருத்தியடைவதை யாரும் தடுக்கவும்  முடியாது அதுபோல் எதிர் வரும் தேர்தல்களில் மயில் சோலையாக அம்பாறை மாவட்டம் காட்சியளிப்பதை அல்லாஹ்வை  தவிர வேறு யாரும் தடுத்து நிறுத்த முடியாது என்பதை சம்மாந்துறை நிந்தவூர் மண் அழகாக அமைச்சர் றிசாத் அவர்களின் அரசியல் எதிரிகளுக்கு சொல்லியுள்ளது

Related Post