Breaking
Thu. Apr 25th, 2024
இவ்வருடம் வெளியிடப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில்
விஞ்ஞானப் பிரிவில்  மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்று வைத்தியத் துறைக்குத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் திருகோணமலை மாவட்டம் மூதூர் சாபி நகரை சேர்ந்த மாணவி எம்.எப் முஸாதிகாவின் வீட்டுக்கு  நேற்று மாலை (28. 12. 2019) முன்னாள்  பிரதி அமைச்சர்  அப்துல்லா மஹ்ரூப் எம்.பி அவர்கள் நேரில் சென்று குறித்த மாணவிக்கும் அம்மாணவியின் பெற்றோருக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்ததோடு பரிசில்களையும் வழங்கி கௌரவபடுத்தி உள்ளார்.
குறித்த மாணவி எதிர்காலத்தில் மேலும் பல வெற்றிகளைப் பெற்று தனது மருத்துவக் கற்கை நெறியினூடாக சிறப்புற்று நம் பிரதேசத்திற்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும்  என்றும் குறிப்பிட்டதோடு அதற்கான சிறந்த முன்னெடுப்புகளும் திட்ட ஒழுங்குகளும் வழிவகுக்கப்பட்டு சிறந்தமுறையில் செயற்படுத்தப்பட நாம் அனைவரும் பங்காற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அன்றாடம் உழைத்து வாழ்ந்து வந்த குடும்பத்தில் பிறந்த இம் மாணவி திருகோணமலை சாஹிராக் கல்லூரியில் கல்வி பயின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related Post