Breaking
Fri. Apr 19th, 2024

பிங்கிரிய தேர்தல் தொகுதி அமைப்பாளர் அப்துல்லாஹ்வின் வேண்டுகோளுக்கிணங்க, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் குருநாகல், திவுரும்பொல, மனாருல் ஹூதா அரபுக் கல்லூரியின் வரவேற்பு மண்டப வேலைகள் நடைபெற்று வருகின்றன.

கட்டிட வேலைகளுக்கான காசோலையை முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்ட அமைப்பாளருமான என்.எம்.நஸீர் அண்மையில் வழங்கிவைத்தார்.
குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் கட்சிக் காரியாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மனாருல் ஹூதா அரபுக் கல்லூரியின் அதிபர் மற்றும் நிருவாக உறுப்பினர்கள் கலந்துகொண்டு கட்டிடத்துக்கான காசோலையை பெற்றுக்கொண்டனர்.
(ன)

Related Post