Breaking
Sat. Apr 20th, 2024

அகமட் எஸ். முகைடீன்

அம்பாறை மாவட்டத்தின் தமன, உகன, தெகியத்த கண்டிய, நாமல் ஓயா போன்ற பிரதேசங்களில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்களாக செயற்பட்ட பெரும்பாண்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளர் சிராஸ் மீராசாஹிபின் அழைப்பின்பேரில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அரசியல் பயணத்தில் (18.06.2015) இணைந்து கொண்டனர்.

மறைந்த பெரும் தலைவர் இன மத வேறுபாடு கடந்து தேசிய ஐக்கிய முன்னணியினை உருவாக்கி சகல இனத்தவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவர அர்பணிப்புடன் செயற்பட்டார். இன மத வேறுபாடு கடந்து அவர் ஆற்றிய சேவையினால் இன்றும் எமது சிங்கள சமூகத்தின் நன்மதிப்புக்குரியவராவார். அவரது பாசறையில் வளர்ந்து அவரை முன்னுதாரணமாக கொண்டு மக்கள் நலனிற்காய் செயற்படுகின்ற அரசியல் தலைமையாக அமைச்சர் றிசாத் பதியுதீன் காணப்படுகிறார். அவரின் கரத்தை பலப்படுத்த நாம் தயார் என அவர்கள் தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்கள் முதல்வராக இருந்த காலங்களில் எவ்வாறு அர்ப்பணிப்புடன் சிறப்பாக மக்கள் பணி ஆற்றினார் என்பதை ஊடகங்கள் வாயிலாக நாம் நன்கறிவோம். துடிப்பான ஆற்றல் மற்றும் சேவை நலம் மிக்க ஒருவரே எமக்கு தேவை. அந்தவகையில் சகல இன மக்களின் பிரதிநிதியாக எதிர்காலத்தில் திகாமடுள்ள தேர்தல் மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு கலாநிதி சிராஸ் மீராசாஹிபை அனுப்புவதற்கு எமது மனப்பூர்வமான ஆதரவினை வழங்குவோம் எனத் தெரிவித்தனர்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *