Breaking
Sat. Apr 20th, 2024

பேருவளை பிரதேச சபை, சீனாவத்தை வட்டார அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர் ஸமீர் ஸாஹிபின் வேண்டுகோளிற்கிணங்க, பேருவளை பிரதேச சபை உறுப்பினர் ஹஸீப் மரிக்காரின் பிரதேச சபை நிதி ஒதுக்கீட்டில், அழுத்கம சீனாவத்தை மஸ்ஜித் வீதியை செப்பனிடும் பணிகள் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

சீனாவத்தை மஸ்ஜித் ஒழுங்கை வீதியின் புனர்நிர்மாணப்  பணிகளை, பிரதேச சபை உறுப்பினர் ஹஸீப் மரிக்கார் நேரில் சென்று பார்வையிட்டதுடன், பாதை செப்பனிடல் பணிகளை துரிதகதியில் பூர்த்தி செய்து வீதியை மக்கள் பாவனைக்கு வழங்குமாறும் வேண்டுகோள் விடுத்தார். 

(ன)

Related Post