Breaking
Sat. Apr 20th, 2024

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாரையில் தனித்தும், ஏனைய 06 மாவட்டங்களில் இணைந்தும் களமிறங்குகின்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாரை மாவட்டத்தில் கட்சியின் மயில் சின்னத்தில் தனித்துக் களமிறங்குவதுடன், வன்னி, மட்டக்களப்பு, திருகோணமலை, குருநாகல், அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்திலும், புத்தளம் மாவட்டத்தில் பொதுக் கூட்டமைப்பின் கீழ், தராசு சின்னத்திலும் ஒட்டுமொத்தமாக 07 மாவட்டங்களில் போட்டியிடுகின்றது.

வன்னி மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் முதன்மை வேட்பாளராகவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்சியின் தவிசாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி முதன்மை வேட்பாளராகவும், திருமலை மாவட்டத்தில் கட்சியின் தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப் முதன்மை வேட்பாளராகவும், அம்பாரை மாவட்டத்தில் சட்ட முதுமாணி வை.எல்.எஸ்.ஹமீட் முதன்மை வேட்பாளராகவும் போட்டியிடுகின்றனர்.

மக்கள் காங்கிரஸின் முன்னாள் எம்.பிக்களான ரிஷாட் பதியுதீன், அமீர் அலி, அப்துல்லாஹ் மஹ்ரூப், இஷாக் ரஹ்மான ஆகிய நால்வரும், மீண்டும் இம்முறை தேர்தலில் களமிறங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Related Post