Breaking
Fri. Apr 19th, 2024

கொழும்பு, மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் கல்லூரிக்கென நிர்மாணிக்கப்பட்ட 03 மாடிக் கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று புதன்கிழமை (19) இடம்பெற்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு படாசாலைக் கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றினார். 

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும், மேல் மாகாண சபை உறுப்பினருமான முஹம்மத் பாயிஸ் மற்றும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

(ன)

Related Post