Breaking
Sat. Apr 20th, 2024
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தம்பலகாமம் பிரதேச சபை  உறுப்பினர் ஹமீட் றஹீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டார் .
திருகோணமலை மாவட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் அப்துல்லா மஹ்றூபை ஆதரித்து, முள்ளிப்பொத்தானை நகரில் மக்கள் சந்திப்பொன்று இடம்பெற்றது.
தம்பலகாமம் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஐ. நஜீமுல்லாஹ்வின் தலைமையில், நேற்று (25) நடைபெற்ற இந்த மக்கள் சந்திப்பின் போது, குறித்த மு.கா உறுப்பினர், மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முதன்மை வேட்பாளருமான அப்துல்லாஹ் மஹ்றூப் முன்னிலையில், மக்கள் காங்கிரஸில்  இணைந்துகொண்டார்.
இந்த சந்திப்பில், முன்னாள் தவிசாளரும் தம்பலகாம பிரதேச சபை உறுப்பினருமான தாலிப் அலி ஹாஜியார், தம்பலகாமம் பிரதேச சபையின்  உறுப்பினர்களான ஹமீட் றஹீம், ஆர்.எம்.றெஜீன், ஆசிரியர் ஐயூப் கான் மற்றும் கட்சிப் பிரமுகர்களும் கலந்துசிறப்பித்தனர்.

Related Post