Breaking
Sat. Apr 20th, 2024

கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்­ ஏற்­பட்ட சுனா­மியின் போது காணாமல் போன 9 வயது சிறுவன் இன்று 21 வயது இளை­ஞ­ராக பெற்­றோர்­க­ளிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்ள சம்­ப­வ­மொன்று முல்­லைத்­தீவில் இடம்­பெற்­றுள்­ளது.

முல்­லைத்­தீவு மாவட்­டத் தின் குமா­ர­பு­ரத்தை நிரந்­தர வசிப்­பி­ட­மாகக் கொண்ட ஜெக­நாதன் குரு­தேவன் என்­ப­வரே 9 வயதில் காணாமல் போயுள்ளார். இவர் காணாமல் போன போது தரம் 4இல் கல்வி கற்று வந்­துள்ளார்.

2004ஆம் ஆண்டு ஏற்­பட்ட சுனாமி அனர்த்­தத்­தினால் பலர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன், இன்னும் சிலர் காணா­மலும் போயுள்­ளனர். அந்த நாளில் காணாமல் போனவர் பட்­டி­யலில் ஜெக­நாதன் குரு­தே­வனும் இடம்­பி­டித்­து­விட்டார்.

இவ்­வாறு அனர்த்­தத்தின் பின்னர் தனது மகனைக் காண­வில்லை என இவரது பெற்­றோர்கள் அனைத்து பதி­வு­க­ளையும் மேற்­கொண்­டி­ருந்­தனர்.தனது மகனை காணாமல் இவர்கள் எல்லா இடங்­க­ளிலும் முறைப்­பாடு செய்­துள்­ள­துடன், மகன் கடத்­தப்­பட்­டி­ருக்­கலாம் என்ற எண்­ணத்தில் இருந்­துள்­ளனர்.எனினும் சகல சந்­தர்ப்­பங்­க­ளிலும் மகன் பற்­றிய முயற்­சி­யை எடுத்­துள்­ள­தாக இவர்கள் குறிப்­பிட்­டனர்.

11 வரு­டங்கள் சிங்­கள பிர­தே­சத்தில் வாழ்ந்து வந்த குறித்த இளைஞர் தற்­போது தனது சொந்த மொழி­யான தமிழ் மொழியை மறந்து சிங்­கள மொழி­யி­லேயே பேசிக் கொண்­டி­ருக்­கிறார்.

இது­பற்றி அவர் குறிப்­பி­டு­கையில், சுனாமி ஏற்­பட்ட போது அப்­போது எனக்கு வயது ஒன்­பது. முல்­லைத்­தீ­வி­லி­ருந்­து­ வ­வு­னியா வரை தனி­யாக சென்று பின்னர், வவு­னி­யா­வி­லி­ருந்து புகை­யி­ர­தத்தில் ஏறி நண்­பர்­க­ளுடன் சென்றேன்.

இவ்­வாறு புகை­யி­ர­தத்தில் சென்ற நான் ஒரு ரயில் நிலை­யத்தில் இறங்கி நின்­று­கொண்­டி­ருந்தேன். அப்­போ­துதான் நான் நிற்கும் இடம் மாகோ புகை­யி­ரத நிலையம் என தெரிய வந்­தது. அப்­போது அங்கு மக்கள் நட­மாட்டம் மிகவும் குறை­வா­கவே இருந்­தது.இடம், மொழி, என எது­வுமே தெரி­யாமல் தனி­யாக நின்று கொண்­டி­ருந்த என்னை ஒருவர் அழைத்துச் சென்று உண்­ப­தற்கு உணவு வாங்கிக் தந்தார். உணவு உண்ட பின்னர் அவர் என்னை மாகோ பொலிஸ் நிலை­யத்தில் ஒப்­ப­டைத்­துள்ளார் .
இவ்­வாறு பொலிஸில் ஒப்­ப­டைக்­கப்­பட்ட நான் பின்னர், தம்­புள்­ளையில் அளவ்­வ ­என்ற இடத்தில் பிக்கு ஒரு­வ­ரினால் நிர்­வ­கிக்­கப்­படும் சிறுவர் இல்­லத்­திற்கு அனுப்பி வைத்­தார்கள்.

நான் இங்­கி­ருந்து சென்ற போது நான்காம் தரத்தில் கல்வி கற்றேன். பின்னர் அங்கு சென்­றதும் தரம் – 9 வரை கற்­றுள்ளேன். கல்வி கற்­பதை பாதி­யி­லேயே நிறுத்­தி­விட்டு அச்­ச­க­மொன்றில் கட­மை­யாற்றி வந்தேன். அவர்கள் எனக்கு உணவு, உடை, இருப்­பிடம் உள்­ளிட்ட அடிப்­படை வச­தி­ வாய்ப்­புக்­களை ஏற்­ப­டுத்தித் தந்­தனர். ஆனால், மாதாந்தம் கொடுப்­ப­ன­வுகள் எத­னையும் கொடுக்­க­வில்லை. எனக்கு வழங்­கப்­படும் சம்­ப­ளப்­ப­ணத்தை வங்­கி­யொன்றில் கணக்கு ஆரம்­பித்து அந்த வங்கிப் புத்­த­கத்தில் சேமிப்பு செய்து வந்­தனர்.

அத்­துடன், நான் இந்­து­வாக இருந்­தாலும், பௌத்த ஆல­யத்­திற்கே வணக்க வழி­பா­டு­க­ளுக்­காக சென்­றி­ருக்­கிறேன். 11 வரு­டங்கள் எனக்கு சந்­தோ­ஷ­மாக இருந்­தாலும், இப்­போது எனது பெற்­றோ­ருடன் வாழும் நாட்­களை யோசிக்கும் போது 11 வரு­டங்­கள் ­பெ­ரி­தாக தெரி­ய­வில்லை என்றார்.

தம்­புள்ளை பிர­தே­சத்தில் முல்­லைத்­தீவு பிர­தே­சத்தைச் சேர்­ந்த இளைஞர் ஒருவர் இருப்­ப­தாக வெளியான தக­வல்­களை அடுத்து சிறுவர் நன்­ன­டத்­தைப்­ பி­ரி­வினர் அங்கு சென்று குறித்த இளை­ஞரை விசா­ரணை செய்த போது தான் முல்­லைத்­தீவு கொக்­குத்­தொ­டு­வாயில் படித்த­தா­கவும், அது தண்­ணீ­ரூற்றில் இருப்­ப­தா­கவும் குறிப்­பிட்­டி­ருக்­கிறார். இது­பற்­றிய தக­வல்கள் உரிய முறையில் பரி­மா­றப்­பட்­டுள்­ள­துடன், மாங்­கு­ளத்தில் உள்ள சிறுவர் நன்­ன­டத்தை பிரிவு அதி­கா­ரிகள் குறித்த இளை­ஞனின் பெற்­றோர்­களை அழைத்து தம்­புள்­ளைக்கு செல்­வ­தற்­கான ஏற்­பா­டு­களைச் செய்­துள்­ளனர்.

பின்னர் திட்­ட­மிட்­ட­படி சிறுவர் நன்­ன­டத்தை அதி­கா­ரிகள் மற்றும் பெற்­றோர்கள் அங்கு சென்ற போது நீதி­மன்­றத்­தி­னூ­டாக குறித்த இளைஞர் 11 வரு­டங்­களின் பின்னர் பெற்­றோர்­க­ளிடம் ஒப்­ப­டைக்கப் பட்­டுள்ளார்.

குறித்த இளைஞர் தனது குடும்­பத்­துடன் மீள் இணைப்புச் செய்த போது இவரின் வங்கி வைப்புப் புத்­தகம் ஒப்­ப­டைக்­கப்­பட வில்லை. அடை­யாள அட்டை இல்­லாத குறித்த இளை­ஞரை அடை­யாள அட்டையை பெற் றுக் கொண்டு தந்தை யையும் அழைத்து வந்து வங்கிப் புத்­த­கத்தை பெற்­றுக்­கொள்­ளு­மாறு இளைஞரை வளர்த்த பௌத்த மதகுரு குறிப்பிட்டுள்ளார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *