Breaking
Thu. Apr 25th, 2024

நாட்டின் சிகரட் பாவ­னையை கட்­டுப்­ப­டுத்தும் நோக்­குடன் சிக­ரட்டின் வரி அற­வீட்டு முறை­மையில் திருத்தம் செய்­யப்­ப­ட­வுள்­ளது. இதற்­க­மைய அடுத்த வரு­டத்­திற்­கான வரவு செலவு திட்­டத்தின் மூல­மாக சிகரட் விலையை 45 ரூபா­வாக அதி­க­ரிக்­க­வுள்­ள­தாக அபா­ய­கர ஒள­ட­தங்கள் கட்­டுப்­பாட்டுச் சபையின் தலைவர் நிலங்க சம­ர­சிங்க தெரி­வித்தார்.

இது தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் யோசனை முன்­வைக்க திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. புள்ளி விப­ரங்­களின் பிர­காரம் இது­வரை காலப்­ப­கு­தியில் 15 வய­துக்­குட்­பட்­ட­வர்­களில் 70 ஆயிரம் பேர் சிக­ரெட்­டிற்கு அடி­மை­யா­கி­யுள்­ள­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

இது தொடர்பில் அபா­ய­கர ஒள­ட­தங்கள் கட்­டுப்­பாட்டு சபையின் தலைவர் நிலங்க சம­ர­சிங்க கேச­ரிக்கு தகவல் அளிக்­கையில்,

எமது நாட்டில் பத்தில் 7 பேர் தொற்றா நோய் மூலமே இறக்­கின்­றனர். அல்­லது பாதிப்­புக்குள்­ளா­கின்­றனர். அதற்கு அடுத்தபடியாக மதுப் பழக்கம் மற்றும் வாகன விபத்­துக்கள் மூலம் உயி­ரி­ழக்­கின்­றனர். அதனால் தான் இன்று நாட்டில் போதை­ப்­பொருள் வர்த்­த­கத்தை முறி­ய­டிக்க வேண்­டிய தேவை ஏற்­பட்­டுள்­ளது. இது தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் யோசனை முன்­வைக்க திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. புள்ளி விப­ரங்­களின் பிர­காரம் இது­வரை காலப்­ப­கு­தியில் 15 வய­துக்­குட்­பட்­ட­வர்­களில் 70 ஆயிரம் பேர் சிக­ரட்­டிற்கு அடி­மை­யா­கி­யு­ள்­ள­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

நாட்டின் தனி­நபர் வரு­மானம் முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாகும். தற்­போது இலங்­கையின் தனி­நபர் வரு­மானம் 4000 அமெ­ரிக்க டொல­ராகும். எனினும் தனி­ந­பரின் வரு­மா­னத்­திற்­கேற்ப சிகரெட் விலையும் அதி­க­ரிக்­கப்­பட வேண்டும்.

இருந்­த­போ­திலும் கடந்த பத்து வரு­ட கா­லப்­ப­கு­தியில் தனி­நபர் வரு­மானம் அதி­க­ரித்த போதிலும் சிக­ரட்டின் விலைகள் அதி­க­ரிக்­கப்­ப­ட­வில்லை. இதன்­கா­ர­ண­மாக சிக­ரட்டை குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள முடிந்­த­மை­யினால் சிகரட் பாவ­னை­யா­ளர்­களின் எண்­ணிக்­கையும் வெகு­வாக அதி­க­ரித்­தது. எனவே இனி­மேலும் அதற்கு இட­ம­ளிக்க முடி­யாது. சிகரட் புகைப்­பதின் ஊடாக பாரிய விபரீதங்கள் ஏற்­ப­டு­கின்­றன. புற்­றுநோய் ஏற்­ப­டு­வ­தற்­கான பிர­தான கார­ண­மாக சிகரெட் புகைத்தல் கரு­தப்­ப­டு­கின்­றது.

இந்­நி­லையில் சிகரட் பாவ­னை­யா­ளர்­களின் எண்­ணிக்கை குறைக்கும் நோக்­குடன் சிக­ரட்­டிற்­கான புதிய வரி அற­வீட்டு முறை­மை அறி­முகம் செய்­யப்­ப­ட­வுள்­ளது. இத­னூ­டாக சிகரட் பாவ­னை­யா­ளர்­களின் எண்­ணிக்­கையை முடிந்­த­ளவு குறைக்க முடியும் என்று எதிர்­பார்க்­கின்றோம். இதன்­பி­ர­காரம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நாடு திரும்­பி­ய­வுடன் இது தொடர்­பி­லான கோரிக்­கையை நாம் முன்­வைக்க திட்­ட­மிட்­டுள்ளோம்.

இதற்­க­மைய அடுத்த வரு­டத்­திற்­கான வரவு செலவு திட்­டத்தின் போது சிக­ரட்டின் விலையை 45 ரூபா­வாக அதி­க­ரிப்­ப­தற்கு திட்­ட­மிட்­டுள்ளோம். இந்த யோச­னையை நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­வி­டமும் முன்­வைக்­க­வுள்ளோம். நாட்டில் 15 வய­துக்­குட்­பட்­ட­வர்­களில் 70 ஆயிரம் பேர் சிகரட் பாவ­னைக்கு அடி­மை­யா­கி­யுள்­ளனர். எமது நாடு இன்று மது­பான பொருட்கள் விற்­பனை மூலம் 130 பில்­லியன் வரு­மானத்தை ஈட்­டிக்­கொள்­கி­றது.

அதில் சிகரட் மூலம் 77 பில்­லி­யனும், மது­பானம் மூலம் 53 பில்­லி­யனும் நாட்டிற்கு கிடைக்­கின்­றது. ஆன­போ­திலும் மது பாவனையினால் பாதிப்புக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்காக சுகாதார அமைச்சு மேற்குறித்தது போன்ற இருடங்கு செலவினை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

மதுபாவனை பொருட் களின் விற்பனையினை கட்டுப்படுத்தும் வகையிலான சட்டங்கள் இலங்கையில் இருந்த போதிலும் விற்பனையாளர்கள் மிகவும் சூட்சுமமான முறையில் மாணவர் களை இலக்கு வைத்து தமது வர்த்தகத்தை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றனர் என்று கூறினார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *