Breaking
Wed. Apr 24th, 2024
தகவல் அறியும் சட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கொன்று நாளை 27 ஆம் திகதி முற்பகல் 09 மணிக்கு அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தலைமையில் நடைபெறவுள்ள இச் செயலமர்வில் பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான மற்றும் அமைச்சின் செயலாளர் நிமல் போபகே ஆகியோரும் பங்குபற்றவுள்ளனர்.

இலங்கை வாழ் மக்களின் தகவல் அறியும் உரிமையை பலப்படுத்தும் நோக்கில் தற்போதய அரசாங்கத்தின் மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு சட்டமாக்கப்பட்ட தகவல் அறியும் சட்டம் தொடர்பில் மக்களை அறிவுறுத்துவதென்பது தேசிய தேவையொன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது.  அதன் ஆரம்ப கட்டமாக ஊடகவியலாளர்களை இது தொடர்பில் அறிவுறுத்துவதே பொருத்தமாகும் என்பதே நம்பிக்கை.

அதனடிப்படையில் மேற்கூறப்பட்ட சட்டம் தொடர்பில் விசேட ஊடக கருத்தரங்கொன்றினை நடாத்துவதற்கு இலங்கை பத்திரிகையாளர் சங்கம் மற்றும் அரசாங்க தகவல் திணைக்களம் என்பன இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *