Breaking
Sat. Apr 20th, 2024
முஸ்­லிம்­களின் உணவு தொடர்பில் கடந்த காலங்­களில் சில தரப்­பினர் விமர்­ச­னங்­களை ஏற்­ப­டுத்­தினர். அதனை ஹலால் பிரச்­சி­னை­யாகக் கொண்டு வந்­தனர். எனினும் முஸ்­லிம்­க­ளுக்கு ஹலால், ஹராம் என்­கின்ற இரு விட­யங்கள் உள்­ளன.
ஹலா­லா­ன­வற்றை உண்­ப­தற்கே அவர்­க­ளுக்கு சம­யத்தில் அனு­ம­தி­யுண்டு. இஸ்லாம் சம­யத்­தின்­படி மது­பானம் அருந்­து­வது ஹரா­மாக்­கப்­பட்­டுள்­ளது.
அதனால் அவர்கள் மது­பானம் பாவிப்­ப­தில்லை. அது வர­வேற்­கத்­தக்க விட­ய­மாகும் என அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.
‘மது­சா­ர­மற்ற இலங்கை’ எனும் தொனிப்­பொ­ரு­ளி­லான தேசிய மாநாடு நேற்று காலை பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த மாநாட்டு மண்­ட­பத்தில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.
அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,
முஸ்­லிம்­களில் மிகவும் சிறி­ய­ள­வி­லான தொகை­யி­னரே மது­பானம் அருந்­து­கின்­றனர். ஏனை­ய­வர்­களைப் போல் அவர்­களும் மது­பானம் அருந்­து­வார்­க­ளாயின் இலங்கை அப்­பா­வ­னையில் தற்­போ­துள்­ளதை விட மோச­மான நிலை­யினை அடைய வேண்­டி­வரும்.
எனது பிர­தேச சனத் தொகையில் 31 சத­வீதம் முஸ்­லிம்கள் வசிக்­கின்றர். அவர்­களின் வீடு­க­ளுக்கு நான் அடிக்­கடி செல்­கின்றேன். அவர்கள் உணவு பரி­மா­றும்­போது ஒரு­போதும் மது­பானம் பரி­மா­றி­ய­தில்லை. அத­னை­யொட்டி நாம் சந்­தே­மா­ஷ­ம­டைய வேண்டும்.
மேலும் புகைத்தல் பாவ­னை­யினை தடுப்­ப­தனை அடிப்­ப­டை­யாகக் கொண்டு புகை­யிலை கூட்­டுத்­தா­ப­னங்­களின் வரி 90சத­வீ­த­மாக அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ளது.
அந்த வரு­மா­னத்தைக் கொண்டு  சுகா­தா­ரத்­து­றை­யி­லுள்ள சகல வற் வரி­யி­னையும் நீக்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வுள்­ளது.
அதற்­கான அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்தை நானும் ஜனா­தி­ப­தியும் இணைந்து அமைச்­ச­ர­வையில் சமர்ப்­பிக்­க­வுள்ளோம்.
புகை­யிலை கூட்டுத் தாப­னங்­க­ளுக்­கான வரி அதி­க­ரிப்பு தொடர்பில் பேச்சு வார்த்­தைக்கு வரு­மாறு அக்­கூட்­டுத்­தா­ப­னங்கள் எனக்கு அழைப்பு விடுத்­தன.
எனினும் பேச்­சு­வார்த்தை நடத்த வேண்­டிய அவ­சியம் இல்லை. முன்னாள் சுகா­தா­ரத்­துறை அமைச்சர் பேச்சுவார்­த­்தை­களை நிறை­வு­செய்து விட்டார். நான் அதனை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டிய தேவை மாத்­திரம் உள்­ள­தாக அவர்­க­ளிடம் தெரி­வித்தேன்.
புகை­யிலை கூட்டுத்தாபனங்­களின் வரி அதி­க­ரிப்பு தொடர்பில் எவ­ரு­டனும் பேச்­சு­வார்­த்தை நடத்த வேண்­டிய அவ­சியம் எனக்­கில்லை.
புகை­யி­லைக்­கான வரி அதி­க­ரிப்பின் மூலம் கிடைக்ரும் வரு­மா­னத்தை விட புகைத்தல் பாவ­னை­யினால் பாதிக்­கப்­ப­டு­ப­வர்­களின் சிகிச்­சைக்கு அதி­க­ள­வான  நிதி­யினை செல­விட வேண்­டி­யுள்­ளது.
முன்னாள் ஜனா­தி­பதி ரண­சிங்க பிரே­ம­தா­சவின் ஆட்சி காலத்­திலும் புகை­யிலைக் கூட்­டுத்­தா­ப­னங்­களின் வரி 90சத­வீ­த­மாக அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.
மேலும் ஒவ்­வொரு முறையும் புகை­யி­லைக்­கான வரி அதி­க­ரிக்­க­ப்படும் போது புகைத்தல் பாவனை 4.5 சத­வீ­தத்­ததால் குறை­வ­டை­கி­றது.
எனவே புகை­யி­லைக்­கூட்டுத் தாப­னங்­களின் வரி அதி­க­ரிப்பு தொடர்­பி­லான அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்தை எதிர்­வரும் அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் ஜனா­தி­ப­தி­யுடன் இணைந்து முன்­வைக்­க­வுள்ளேன்.
மேலும் புகைத்தல் பாவ­னை­யினை தடுப்­ப­தற்­காக அவுஸ்­தி­ரே­லியா ‘ப்லேங் பெகேஜ்’ எனும் திட்டம் ஒன்றை அறி­மு­கப்­ப­டுத்­தி­யது. அதன் மூலம் பெட்­டி­களில் பெயர் மாத்­திரம் பொறிக்க முடியும்.
அது தவிர வேறு கவர்ச்சி விட­யங்கள் எதுவும் பொறிக்க முடி­யாது.
எனவே எதிர்­வரும் அமைச்­ச­ரவைக் கூட்­டங்­களில் ‘ப்லேங் பெகேஜ்’ திட்­டத்­திற்­கான அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்­தையும் சமர்ப்­பிக்­க­வுள்ளேன்.
அத்­துடன் 2020 ஆம் ஆண்­ட­ளவில் புகை­யிலை உற்­பத்­தி­யினை முழு­மை­யாக தடுப்­ப­தற்கு  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எதிர்­பார்த்­துள்ளார்.
எனவே எமது நாட்டில் புகைத்தல் மற்றும் மது­சா­ரத்­திற்கு எதி­ராக பல்­வேறு திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. புகைத்தல்  மற்றும் மது­சார பாவ­னைக்கு எதி­ரான ஐக்­கிய நாடுகள் சபையின் இவ்வருட அமர்வின் போது, புகைத்தல் மற்றும் மதுசாரத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் முன்னணி நாடுகள் 8 ஐக் குறிப்பிட்டனர்.
மேலும் நாம் எதிர்காலத்தில் அது தொடர்பில் மேற்கொள்ளவுள்ள திட்டங்களை முன்வைத்தபோது, அதனை நடைமுறைப்படுத்தினால் மதுசாரம் மற்றும் புகைத்தல் பாவனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை இலங்கை பெறும் எனக் குறிப்பிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.   MC.Najimudeen

By

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *