இந் நிகழ்வு லேக் ஹவுஸ் முஸ்லீம் மஜ்லிசின் தலைவா் பாகீம் சம்ஸ் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு லேக் ஹவுஸ் தலைவா், பணிப்பாளா்கள், லேக் கவுஸ் நிறுவன பத்திரிகைகளின் ஆசிரியா்கள் கலந்து கொண்டாா்கள். இந் நிகழ்வின் போது அமைச்சா்களான ரவுப் ஹக்கீம், றிசாத் பதியுத்தீன், பைசா் முஸ்தபா, ஏ.எச்.எம் பவுசி, இராஜாங்க அமைச்சா் பைசால் காசீம் கிழக்கி மாகாணசபை உறுப்பிணா் மாஹிர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்லம் ஹாஜியார் என பலரும் கலந்து கொண்டனா்.
இந் நிகழ்வின்போது அனா்ந்தங்களின்போது சிறந்த சேவையாற்றி வரும் பிரதியமைச்சா் பாலித்த தேவப்பெருமவின் சேவையை பாராட்டி லேக் முஸ்லீம் மஜ்லிஸ் பாராட்டி கொளரவித்து நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது. அத்துடன் முஸ்லீம் மஜ்லிசின் உறுப்பிணராக இருந்த ஊழியா்களுக்கு நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.