ஹபீல் எம்.சுஹைர்)
“இலங்கை முஸ்லிம்களின் தற்போதைய நிலவரம் குறித்து அமைச்சர் றிஷாத் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அவுஸ்திரேலியத் தூதுவர் பிரைஸ் ஹட்செஸ்செனிடம் விளக்கமளித்துள்ளார்.
இலங்கை அரசு சர்வதேச அழுத்தங்களை எதிர்நோக்கி இருக்கின்ற நிலையில், இலங்கை முஸ்லிம் தலைவர்கள் இவ்வாறான முன்னெடுப்புக்களைச் செய்வது இலங்கை நாட்டுக்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். இருந்தாலும், இன்று முஸ்லிம்கள் எதிர்நோக்கி இருக்கும் பிரச்சினைகள் சர்வதேச மயப்படுத்தப்பட வேண்டியதும் காலத்தின் கட்டாயத்தேவையுமாகும்.
இதனைச்செய்யும் முஸ்லிம் அரச தலைவர் இலங்கை ஆட்சியாளர்களின் வெறுப்பைச் சம்பாதிப்பார் என்பதிலும் ஐயமில்லை. தற்போது அமைச்சர் றிஷாத் இவ்வரசின் அமைச்சுப்பதவியிலிருந்து கொண்டு இவ்வாறான செயற்பாடுகள் தனது பதவிகளுக்கு ஆப்பாக அமைந்து விடுமென நன்கறிந்திருந்தும் தைரியமாக முன்னெடுக்கும் அவரது சமூகப்பற்றைப் பாராட்டாமல் இருக்க முடியாது. அமைச்சர் றிஷாத் பதவி, பட்டங்களை முதன்மையாகக் கொண்டிருந்தால் இதனை அவர் பகிரங்கப்படுத்தாமல் இரகசியமாகப் பாதுகாத்திருக்க முடியும். இதன் மூலம் இவ்வாட்சியாளர்களுக்கு பயப்படும் கோழை நானல்ல என்பதை நிரூபித்துள்ளார்.
இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து பல பக்கங்களைக் கொண்ட அறிக்கையை 2014ம் ஆண்டு ஹசனலி கட்சி சார்பாக அந்நேரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளராக இருந்த நவநீதம் பிள்ளையிடம் ஒப்படைத்திருந்தார். இந்த விடயம் இரகசியமாக இருக்குமென்று நினைத்தே செய்தார். இது பகிரங்கமாக அதனை தான் வழங்கவில்லையென ஹசனலியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் மாட்டி விட்டு நல்ல பெயர் வாங்கியிருந்தார். இதன் மூலம் நான் கூற வருகின்ற விடயமானது, அமைச்சர் றிஷாத் இந்த விடயத்தை தனது முகநூல் பக்கத்தில் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளதன் மூலம், அன்று அமைச்சர் ஹக்கீம் அதனைச் செய்தது தானல்ல என மறுத்து நல்ல பெயர் வாங்கி, தனது பதவிகளைப் பாதுக்காத்தது போன்று செய்ய முடியாதென்பதாகும். இவ்விடயமானது அமைச்சர் றிஷாத் பதவி, பட்டங்களுக்கு ஆசைப்பட்டவரல்ல என்ற விடயத்தையும் சுட்டிக்காட்டுகிறது.
இவ்வாறு ஆட்சியாளர்களுக்கு அஞ்சாத ஒரு தலைவரே எமக்கும் தேவையாகும்.