சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிசாசலுக்கு ஜனாசா வாகனமொன்றை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனால் பள்ளிவாசல் தலைவர் அல்-ஹாஜ் வை.எம்.ஹனிபாவிடம் நேற்று (09) கையளிக்கப்பட்டது.
லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவர் சிராஸ் மீராசஹிப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வுக்கு பிரதி அமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், அரச வர்த்தக கூட்டுத்தாபனத் தலைவர் ஏ.எம்.ஜமீல் உட்பட பள்ளிவாசல் நிர்வாகிகளும் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.