நிந்தவூர் பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற, ஊடகத்துறையில் பொன்விழா கண்ட சிரேஷ்ட ஊடகவியலாளரும், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் பிரதித் தலைவருமான கலாபூஷணம் ஏ.எல்.எம் சலீம் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர் கெளரவ அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்,
இன்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி கட்சியின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான அமீர் அலி, கட்சியின் பிரதித்தலைவரும் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான ஏ.எம் ஜெமீல் அவர்களும், லக்சல நிறுவனத்தின் தலைவரும் முன்னால் உபவேந்தருமான இஸ்மாயில் அவர்களும். இந்நிகழ்வில் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, முன்னால் அமைச்சர்களான பசீர் சேகுதாவுத், ஹசன் அலி ஆகியோரும் கலந்து சிறப்பித்தது குறிப்பிடத்தக்க அம்சமாகும்