Breaking
Tue. Apr 16th, 2024

அரசியல் தலைவர்களுக்கிடையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியாமல் இருக்கின்ற கிழக்கு முதலமைச்சருக்கு சிரேஷ்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் நல்ல செயற்பாடுகளை கற்றுக் கொடுத்திருக்கின்றார்கள் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புணாணை மேற்கு கிடச்சிமடு விசரோடை பாலத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு செவ்வாய்கிழமை விவசாய அமைப்பின் தலைவர் எம்.வி.அஹமட் லெப்பை தலைமையில் நடைபெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்!

மட்டக்களப்பு மாவட்டத்திலே உள்ள அரசியல் மிகவும் கேவலம் கெட்டுப் போயுள்ள அரசியல். அரசியல் தலைவர்களுக்கிடையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியாமல் இருக்கின்ற கிழக்கு முதலமைச்சரை போன்றவர்களுக்கு ஹிஸ்புல்லாஹ் போன்ற சிரேஷ்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளை பார்த்து அவர் அரசியல் நாகரீகத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.

தேர்தல் காலங்களில் மாத்திரம் அரசியல்வாதிகள் கருத்து மோதலால் பிரிந்து இருப்பார்கள். தேர்தல் முடிந்ததும் சமூகப் பார்வையோடு அரசியல்வாதிகள் செயற்பட வேண்டும் அவ்வாறு செயற்படுபவர்கள்;தான் சிறந்த அரசியல்வாதிகளாக திகழ முடியும்.

கல்குடா பிரதேசம் விவசாய சமூகம் மற்றும் மீன்பிடி சமூகமாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற சமுகமாகும் இவ்விரு சமூகமும் சிறப்பாக இருந்தால் மாத்திரம் தான் பிள்ளைகளின் கல்வி, பிரதேச அபிவிருத்தி என்ற கனவை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

பொத்தானை பிரதேசத்தில் 127 குடும்பங ;கள் காலாகாலமாக வாழ்ந்து வந்த குடும்பம் இவர்களுக்கு வாக்காளர் பட்டியல், பிறப்புச் சான்றிதழ், அடையாள அட்டைகள் அங்கு இருந்தமைக்காக ஆதாரமாக இருந்த போதும் அரச அதிகாரிகள் மீள்குடியேற அனுமதிக்கின்றார்கள் இல்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் அரசியல் தலைவர்கள் எவ்வளவு நெருக்குதலோடு உங்களுக்கு சேவை செய்து வருகின்றோம் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

புணாணையில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் பல்கலைக் கழகத்தை பொதுபலசேனா அணியினர் வந்து இது கிழக்காசியாவிலே கட்டப்படும் பெரிய பள்ளிவாயல் என்று சொல்லும் அளவிற்கு இன்று மக்களுடைய மனநிலை மாறியிருக்கின்றது.

இலங்கையிலே இல்லாத ஒரு பல்கலைக் கழகத்தை தனிமனிதாக இருந்து செயற்படுவது சாமாத்தியமான விடயமாக பார்க்க முடியாது. இது அவருடைய நேர்மைக்கு கிடைத்த வெற்றியாகும்.

ஒருவன் விழுகின்ற போது அவனை தூக்கி விடும் அரசியல்வாதியாக நாங்கள் செயற்படுகின்றோம். இன்னொருவன் செய்த வேலைத் திட்டத்தில் தங்களுடைய பெயரை போட்டுக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் ஆசைப்பட்டது கிடையாது.

அரசியல் கலாச்சாரத்தின் படி பிரதேசத்தில் ஆரம்பித்து வைக்கும் விடயத்தை ஆரம்பித்தவரை கொண்டு வந்தே திறந்து வைக்கப்பட வேண்டும். இந்த பாலத்தை ஆரம்பித்து வைக்கும் நாங்களே உயிரோடு இருந்தால் வந்து திறந்து வைப்போம். கிழக்குமுதலமைச்சரை போன்று செயற்பட மாட்டோம் என்பதை அவருக்கு முதல் பாடமாக தெரிவிக்கின்றோம். இனிவரும் காலங்களில் பல பாடங்களை படிப்பித்து காட்ட இருக்கின்றோம் என்றும் தெரிவித்தார்.

கிராமிய பாலங்கள் புனரமைப்பு செய்யும் வேலைத் திட்டத்தின் கீழ் உள்ளுராட்சி மாகாண அமைச்சினால் மூன்றரை கோடி ரூபாய் நிதியில் அமையப்பெறும் இப்பாலம் 22 மீற்றர் நீளமும், 4 மீற்றர் அகலமும் கொண்டதாக அமையப்படவுள்ளதாக இத்திட்டத்திற்கு பொறுப்பான பொறியலாளர் எம்.கபீர் தெரிவித்தார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *