Breaking
Tue. Apr 16th, 2024
சிறுபான்மை மக்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தி, பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான நீதிக்கான அகிம்சை வழி போராட்டம், பல்லாயிரக் கணக்கானோரின் ஆதரவுடன் இன்று (07) பொலிகண்டி மண்ணை சென்றடைந்துள்ளது.
 
ஐந்து நாட்களாக முன்னெடுக்கப்பட்ட P2P பேரணி இன்று நிறைவுக்கு வந்துள்ளது.
 
இதேவேளை, தமிழ் மக்களுடன் கைகோர்த்து, எமக்கான உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டத்தில் பங்கேற்ற ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
 

Related Post