அமெரிக்க ஆய்வு கூடமொன்றிலிருந்து அதி பயங்கரமான , உயிராபத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு வகை பக்றீரியா வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
‘Burkholderia pseudomallei’ என்றழைக்கப்படும் ஒரு வகை பக்றீரியாவே வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டுலேன் தேசிய முதனிகள் ஆராய்ச்சி மத்திய நிலையத்தில் (Tulane National Primate Research Center) இருந்தே குறித்த பக்றீரியாவானது வெளியேறியுள்ளது. பக்றீரியா எவ்வாறு வெளியேறியது என்பது தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அதி உயர் பாதுகாப்பு கொண்ட குறித்த ஆராய்ச்சி நிலையத்தில் எவ்வாறு இச்சம்பவம் இடம்பெற்றது என்பது தொடர்பில் இன்னும் மர்மம் நீடிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.குறித்த பக்றீரியாவானது தெற்காசியா மற்றும் வட அவுஸ்திரேலியாவில் அதிகளவில் காணப்படுவதாகவும் , இது மனிதர் மற்றும் விலக்குகளுக்கு பரவக் கூடியதெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இச்சம்பவம் சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளதுடன் தற்போதே இது தொடர்பில் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது. மேலும் குறித்த ஆராய்ச்சி நிலையத்திற்கு விஜயம் செய்த அதிகாரியொருவரும், அங்கு வளர்க்கப்பட்டு வரும் குரங்கள் சிலவும் சுகவீனமடைந்த தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.