Breaking
Sat. Jun 21st, 2025

பொலிஸ் மா அதி­பரின் ஆலோ­ச­னை­யின்றி சட்டம் மற்றும் சமா­தானம் தொடர்­பான அமைச்சர் ஜோன் அம­ர­துங்­க­ தன்னிச்சையாக பொலிஸ் அதி­கா­ரி­களை இட­மாற்றம் செய்­து­வ­ரு­கிறார். எனவே, அவ­ரிடம் இருந்து பொலிஸ் துறையை மீளப்­பெ­று­மாறு ஜனா­தி­ப­தியை வலி­யு­றுத்­து­கின்றோம் என எதிர்க்­கட்சி தலைவர் நிமல் சிறி­பால டி. சில்வா தெரி­வித்தார்.

கிறிஸ்­தவ விவ­காரம் மற்றும், அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சைக் கொடுத்­து­விட்டு பொலிஸ்­து­றையை மீளப்­பெ­று­மாறு மீளப்­பெ­று­மாறு கோரு­கின்றோம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

கொழும்பில் நேற்று நடை­பெற்ற விசேட செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்,

பொலிஸ் மா அதி­பரின் ஆலோ­சனை இன்றி சட்­ட­ மற்றும் ஒழுங்கு அமைச்சர் ஜோன் அம­ர­துங்க தனது தேவைக்­கேற்­ற­வாறு பொலிஸ் அதி­கா­ரி­களை இட­மாற்றம் செய்து வரு­கின்றார். இதனை பொலிஸ் மா அதி­பரும் தெரி­வித்­துள்ளார்.

தேர்­தலை இலக்குவைத்து ஐ.தே.க. இவ்­வாறு செயற்­ப­டு­கின்­றது. எனவே சட்டம், மற்றும் சமா­தான அமைச்சுப் பத­வி­க­ளி­லி­ருந்து உட­ன­டி­யாக ஜோன் அம­ர­துங்­கவை நீக்­கு­மாறு கோரு­கின்றோம். கிறிஸ்­தவ விவ­காரம் மற்றும், அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சைக் கொடுத்­து­விட்டு பொலிஸ்­து­றையை மீளப்­பெ­று­மாறு கோரு­கின்றோம் என்றார்.

கேள்வி:- ஜோன் அம­ர­துங்­க­விற்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு என்ன நடந்­தது?

பதில்:- அது அவ்­வாறே இருக்­கின்­றது. தேவை ஏற்­படின் அதனை நாமே கொண்­டு­வ­ருவோம். நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணையை கொண்­டு­வந்­தாலும் அமைச்சர் பதவி வில­க­வேண்டும் என்ற அவ­சியம் இல்லை. இதனை நீங்கள் புரிந்­து­கொள்­ளுங்கள். ஆனால் நாம் எடுத்த இந்த முயற்­சியின் கார­ண­மாக வெற்­றி­களை அடைந்தோம். பல ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன என்­ப­தனை புரிந்­து­கொள்­ளுங்கள்.

கேள்வி:ஐ.தே.க.வுடன் இணைந்து பல சுதந்திரக்கட்சி எம்.பி.க்கள் போட்டியிட உள்ள
தாக அமைச்சர் அகில விராஜ் கூறியுள் ளாரே?

பதில்:- அமைச்சர் அகிலவிராஜ் கனவு கண்டுள்ளார்.

Related Post