Breaking
Thu. Mar 20th, 2025

ம்மை இழிவுபடுத்தியதாகத் தெரிவித்து கடுவெல நகரசபையின் தலைவர் ஜீ.எச்.புத்ததாச வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

2014ம் ஆண்டில் விமலின் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியினால் பிரசுரிக்கப்பட்ட பத்திரிகையொன்றில் தம்மை இழிவுபடுத்தி தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பஞ்சாயுதம் என்ற பெயரில் இந்த பத்திரிகை பிரசுரமாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமது நற்பெயருக்கு களங்கம் எற்படுத்தியமைக்காக அமைச்சர் விமல் வீரவன்ச ஐந்து கோடி ரூபா நட்ட ஈடு வழங்கப்பட வேண்டுமென புத்ததாச கோரியுள்ளார்.

கொழும்பு மாவட்ட நீதிமன்றில் இன்று இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச கட்சியின் செயலாளர்ப பிரியன்ஜன் விதாரனகே ஆகியோருக்கு எதிராக இவ்வாறு நட்ட ஈடு கோரி நகரசபைத் தலைவர் புத்ததாச வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

Related Post