Breaking
Wed. Jun 18th, 2025

மறைந்த அஸ்கிரிய பீட மகாநாயக்க உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 12ம் திகதி அஸ்கிரிய பொலிஸ் பார்க் மைதானத்தில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகயீனமுற்றிருந்த நிலையில் சிங்கப்பூர் எலிசபத் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் இன்று அதிகாலை காலமானார்.

அவரது பூதவுடலை அரச மறியாதையுடன் இலங்கைக்கு கொண்டு வரும் நோக்கில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பணிப்பில் நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ விசேட பிரதிநிதியாக இன்று காலை சிங்கப்பூர் சென்றுள்ளார்.

Related Post