Breaking
Sat. Jun 21st, 2025

இத்­தா­லிய கிரா­ம­மொன்றில் ஒரே நாளில் 100 அங்­குல (சுமார் 8 அடி) உய­ரத்­திற்கு பனிப்­பொ­ழிவு இடம்­பெற்­றுள் ளது.

ரோம் நகரின் கிழக்கே சுமார் 125 மைல் தொலை­வி­லுள்ள கப்­ர­கொதா கிரா­மத்தில் இடம்­பெற்ற இந்த பனிப்­பொ­ழி­வா­னது தனி­யொரு நாளில் இடம்­பெற்ற அதி­க­ள­வான பனிப்பொழிவு என்ற உலக சாத­னையை படைத்­துள்­ளது.

மேற்­படி பனிப்­பொ­ழி­வை­ய­டுத்து மக்கள் தமது வீடு­க­ளி­லி­ருந்து வெளி­யேறுவதற்கு பனிக்­ கு­வி­ய­லி­னூ­டாக சுரங்­கப்­பா­தை­களை தோண்ட நேர்ந்­துள்­ளது.

இந்தப் பனிப்­பொ­ழிவு 1921 ஆம் ஆண்டு அமெ­ரிக்க கொல­ராடோ மாநி­லத்தில் சில்வர் லேக் பிராந்­தி­யத்தில் இடம்­பெற்ற 76 அங்­குல பனிப் பொழிவால் நிறைவேற்றப்பட்ட உலக சாதனையை முறியடித்துள்ளது.

Related Post