இலங்கை வரும் சுஷ்மா சுவராஜ் அவர்கள் இருநாட்டு மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் இலங்கை தலைவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார் என இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் எதிர்வரும் 13ம் திகதி இலங்கைக்கு வரவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விஜயத்திற்கான முன் ஆயத்தங்களை மேற்கொள்ளும் நோக்கில் சுஷ்மா வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் இரண்டு நாட்கள் தங்கியிருக்கும் சுவராஜ், பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.