Breaking
Sat. Jun 21st, 2025

இஸ்­ரே­லிய பாரா­ளு­மன்ற தேர்­த­லுக்­கான வாக்­கெ­டுப்பு நேற்றுச் செவ்­வாய்க்­கி­ழமை ஆரம்­ப­மா­னது இத்­தேர்­தலில் பிர­தமர் பெஞ்­ஜமின் நெட்­டான்­யா­ஹுவின் கட்­சிக்கும் மத்­திய இடது சாரி கூட்­ட­மைப்பு கட்­சிக்கும் கடும் ­போட்டி நிலவுதாகக் கூறப்படுகிறது.

மத்­திய இடது சாரி கூட்­ட­மைப்­பா­னது பலஸ்­தீனம் மற்றும் சர்­வ­தேச சமூ­கத்­து­ட­னான உற­வு­களை மறு­சீ­ர­மைப்­ப­தாக உறு­தி­ய­ளித்­துள்­ளது.பிந்­திய கருத்­துக்­க­ணிப்பு வாக்­கெ­டுப்­புகள் நெட்­டான்­யா­ஹுவின் கட்­சியை விடவும் இடதுசாரி கூட்­ட­மைப்பு 3 முதல் 4 ஆச­னங்­களை கூடு­த­லாக பெறும் வாய்ப்­புள்­ள­தாக தெரி­விக்­கின்­றன.

தான் நான்­கா­வது தட­வை­யாக வெற்­றி­பெறும் பட்­சத்தில் பலஸ்­தீ­னத்தின் உரு­வாக்­கத்­திற்கு அனு­ம­திக்கப் போவ­தில்லை என பெஞ்­ஜமின் நெட்­டான்யாஹு சூளு­ரைத்­துள்ளார்.
காலை 7.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணி­வரை இடம்­பெற்ற இஸ்­ரேலின் 120 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை தெரிவு செய்வதற்கான இந்தத் தேர்தலில் வாக்களிக்க சுமார் 6 மில்லியன் பேர் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post