மட்டக்களப்பு, கல்குடா, இன்டர்நெஷெனல் பாலர் பாடசாலையின் 18வது விடுகை விழா, கடந்த 12ஆம் திகதி, ஓட்டமாவடி தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான M.S.S.அமீர் அலி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், குறித்த பாடசாலையின் மாணவர்கள் நலன் கருதி Interactive Flat Panel Display (smart board) ஒன்றினையும் அன்பளிப்பாக வழங்கி வைத்தார்.


