பாராளுமன்ற உறுப்பினர் முத்து முஹம்மட் அனுதாபம்!
முன்னாள் மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் சியானின் மறைவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் முத்து முஹம்மட் அனுதாபம் தெரிவித்துள்ளார்.
அவர் தனது அறிக்கையில்,
“காலம் சென்ற கல்விமான் முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர் சியான் அவர்களின் மறைவு கல்வி உலகிற்கு பேரிழப்பாகும். புத்தளம், மன்னார் கல்வி வலயங்களில் பணியாற்றி பலரது வளர்ச்சிக்கு தூணாகவும் துணையாகவும் இருந்தவர்.
இவரது இழப்பால் துயரும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவிப்பதுடன், அவரது பாவங்கள் மன்னிக்கப்பட்டு, ஜன்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கம் கிடைக்க இறைவனை பிராத்திக்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
