Breaking
Sat. Jan 18th, 2025

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட எம்.டீ.எம்.முஸம்மில் அவர்களுக்கு, வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு, சனிக்கிழமை (04) கல்கமுவ, வல்பாலுவ பகுதியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், குருநாகல் மாவட்ட அமைப்பாளரும் ஓய்வுபெற்ற அதிபருமான எம்.டீ.எம்.முஸம்மில், கட்சியின் உயர்பீட உறுப்பினர்களான இர்பான், அஷார்டீன் மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அஷாட் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள், ஊர்ப்பிரமுகர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post