சபாநாயகர் தலைமையில் அரசியலமைப்பு சபை இன்று கூடுகின்றது

0
374
அரசியலமைப்பு சபை இன்று (10) பிற்பகல் 4 மணிக்கு, சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.

புதிய சட்டமா அதிபரை நியமிப்பதற்காக ஜனாதிபதியினால் அரசியலமைப்பு சபைக்கு பிரேரிக்கப்பட்ட மூன்று பெயர்கள் தொடர்பிலலேயே இன்று கலந்தாலோசிக்கப்பட உள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க குறிப்பிட்டார்.

அதன் பின்னர் அரசியலமைப்பு சபை அங்கத்தவர்களின் இணக்கத்துடன் சட்டமா அதிபர் நியமனம் குறித்து தீர்மானம் எட்டப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here