Breaking
Sat. Jun 21st, 2025

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நான்கு நாள் உத்­தி­யோ­க­பூர்வ அரச விஜயம் ஒன்றை மேற்­கொண்டு அடுத்­த­வாரம் சீனா­வுக்கு பய­ண­மா­கின்றார்.

சீன ஜனா­தி­ப­தியின் அழைப்­பை­யேற்று எதிர்­வரும் 25 ஆம் திகதி சீனா செல்­ல­வுள்ள ஜனா­தி­பதி 28 ஆம் திகதி வரை சீனாவில் தங்­கி­யி­ருப்­ப­துடன் சீன ஜனா­தி­பதி, பிர­தமர், வெளி­வி­வ­கார அமைச்சர் உள்­ளிட்ட பல்­வேறு தரப்­பி­ன­ரையும் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார்.

மேலும் சீனாவில் நடை­பெறும் ஆசிய வரு­டாந்த மாநாட்­டிலும் ஜனா­தி­பதி சிறி­சேன மற்றும் சீன ஜனா­தி­பதி ஷி. ஜின்பின் உள்­ளிட்ட பல நாடு­களின் தலை­வர்கள்
கலந்­து­கொள்­ள­வுள்­ளனர்.

இதே­வேளை சீன விஜ­யத்­தின்­போது இலங்­கையில் சீனா நிர்­மா­ணித்­து­வரும் கொழும்பு துறை­முக நகர் அபி­வி­ருத்தி திட்டம் குறித்து முக்­கி­ய­மாக கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வுள்­ளது.
சீனா­வுக்கும் இலங்­கைக்கும் இடை­யி­லான இரு­த­ரப்பு உறவை பலப்­ப­டுத்­துதல் மற்றும் இரண்டு நாடு­க­ளுக்கு இடை­யி­லான முத­லீ­டுகள் குறித்து கவனம் செலுத்­துதல் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் தொடர்­பா­கவும் இந்த விஜ­யத்­தின்­போது ஆரா­யப்­ப­ட­வுள்­ளது.

சீனா இலங்­கையில் முன்­னெ­டுத்­துள்ள அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்கள் தொடர்­பா­கவும் இந்த விஜ­யத்­தின்­போது பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெ­ற­வுள்­ளன.
தற்­போ­தைய நிலை­மையில் கொழும்பு துறை முக நகர் அபி­வி­ருத்தி திட்டம் தொடர்பில் மீளாய்­வுகள் இடம்­பெற்­று­வ­ரு­கின்­றன. எனினும் அதன் ஒரு பகு­தியின் பணி­களை தொடர்­வ­தற்கு தற்­போது அனு­ம­தி­ய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் கொழும்பு துறை­முக நகர் திட்­டத்தின் எதிர்­கால நிலைமை மற்றும் ஏனைய சீனாவின் அபி­வி­ருத்தி திட்­டங்கள் தொடர்­பா­கவும் இந்த விஜ­யத்­தின்­போது கலந்­து­ரை­யா­டப்­படும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்ற பின்னர் முதற் தட­வை­யாக சீனா­வுக்கு விஜயம் செய்­கின்றார். இதற்கு முன்னர் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர கடந்த பெப்­ர­வரி மாதம் 27 ஆம் திகதி சீனா­வுக்கு விஜயம் செய்து ஜனா­தி­ப­தியின் விஜயம் தொடர்­பாக ஆராய்ந்­து­விட்டு வந்­தி­ருந்தார்.

இதே­வேளை சீனாவில் இடம்­பெறும் ஆசிய வரு­டாந்த மாநாட்டில் சீனா, இலங்கை, ஆர்­மே­னியா, ஆஸ்­தி­ரியா, இந்­தோ­னே­ஷியா, நேபாளம், உகண்டா, கஸ­கஸ்தான், மலே­ஷியா, நெதர்­லாந்து, ரஷ்யா உள்­ளிட்ட சில நாடு­களின் தலை­வர்கள் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அர­சாங்கம் பத­வி­யேற்ற பின்னர் சீன ஜனா­தி­பதி தனது விசேட பிர­தி­நி­தியை இலங்­கைக்கு அனுப்­பி­யி­ருந்தார். இலங்­கை­கக்கு விஜயம் செய்­தி­ருந்த லியு ஜின்­சாவோ குறிப்­பி­டு­கையில் எந்­த­வொரு நாட்­டுக்கும் எதி­ரான கரு­வி­யாக இலங்­கையை சீனா ஒரு­போதும் பயன்­ப­டுத்­தாது. ஒரு நாட்­டுக்கு எதி­ரான கரு­வி­யாக இலங்­கையை நாங்கள் பயன்­ப­டுத்­த­மாட்டோம். அவ்­வா­றான தேவையில் நாங்கள் நாடு­க­ளுடன் உறவு வைத்­துக்­கொள்­ள­மாட்டோம். இலங்கை ஏனைய நாடு­க­ளுடன் உறவை பேணி வரு­கின்­றது. இலங்கை இந்­தி­யா­வுடன் சிறந்த உறவை பேணு­கின்­றது என்று குறிப்­பிட்­டி­ருந்தார்.

இந்­தி­யா­வுடன் சீனா­வுக்கும் சிறந்த தொடர்பு உள்­ளது. மேற்கு நாடு­களை போன்று எந்­த­வொரு நாட்­டி­னதும் உள்­வி­வ­கா­ரங்­களில் சீனா தலை­யிடும் கொள்­கையை கொண்­ட­தில்லை. நாங்கள் அனைத்து நாடு­க­ளிடம் இருந்து கற்­றுக்­கொண்­டு­வ­ரு­கின்றோம். குறிப்­பாக ஐரோப்­பிய ஒன்­றியம் அமெ­ரிக்கா இலங்கை போன்ற நாடு­க­ளிடம் இருந்து கற்­றுக்­கொண்­டு­வ­ரு­கின்றோம். எந்­த­வொரு நாட்­டிலும் எங்­க­ளு­டைய இடம் எத்­த­கை­யது என்று எங்­க­ளுக்கு தெரியும் என்றும் அவர் குறிப்­பிட்­டி­ருந்தார்.

இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி கடந்த வாரம் இலங்­கைக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஜனாதிபதி இந்தோனேஷியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்தோனேஷியாவில் இடம்பெறவுள்ள ஆசிய ஆபிரிக்க மாநாட்டில் கலந்துகொள்ளும் நோக்கிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தோனேஷியா செல்லவுள்ளார். இந்த மாநாட்டில் 29 நாடுகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.vk

Related Post