Breaking
Sat. Jun 21st, 2025

தம்­புள்ளை நகர எல்­லைக்குள் அர­சாங்கம் கைய­ளிக்க முன்­வந்­துள்ள 40 பேர்ச் காணியில் புதிய பள்­ளி­வா­சலை நிர்­மா­ணித்து அதனை உங்கள் கரங்­க­ளா­லேயே திறந்து வையுங்கள் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­டமும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வி­டமும் கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

இக்­கோ­ரிக்­கையை மாத்­தளை திய­பு­புல ஐக்­கிய தேசியக் கட்­சியும் எம். ஜி.ஆர். அண்­ணா­தி­ரா­விட முன்­னேற்ற கழ­கமும் இணைந்து விடுத்­துள்­ளன.

மாத்­தளை திய­பு­புல ஐக்­கியத் தேசியக் கட்சி கிளையின் தலை­வரும் இலங்கை எம்.ஜி.ஆர் அண்­ணா­தி­ரா­விட முன்­னேற்ற கழ­கத்தின் தலை­வரும் நாம் இலங்­கையர் கட்­சியின் தலை­வ­ரு­மான எம்.யு.எம். சுஹைர் ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்கும் அனுப்பி வைத்­துள்ள கடி­தத்­திலே மேற்­கண்ட கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

குறிப்­பிட்ட கடிதத்தில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது,

சவூதி அர­சாங்­கத்தின் நிதி உத­வியின் கீழ் 552 மில்­லியன் ரூபா செலவில் அம்­பாறை அக்­க­றைப்­பற்றில் 40 ஏக்கர் நிலப்­ப­ரப்பில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள சுனாமி வீடுகள் அப்­பி­ர­தே­சத்தில் சுனா­மி­யினால் பாதிக்­கப்­பட்ட முஸ்­லிம்­க­ளுக்கு பகிர்ந்­த­ளிக்­கப்­ப­ட ­வேண்டும்.

பலரால் அப­க­ரிக்­கப்­பட்­டி­ருக்கும் கொழும்பு மாளி­கா­வத்தை முஸ்லிம் மைய­வா­டிக்குச் சொந்­த­மான 37ஏக்கர் காணியும் மீண்டும் மைய­வா­டிக்கு பெற்­றுக்­கொ­டுக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்டும். அத்­தோடு மைய­வா­டிக்­கா­ணியில் 19 பேர்ச் காணியில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டு­வரும் கட்­டிட நிர்­மாணப் பணி­களை உடன் நிறுத்தி நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்டும்.

உம்ரா கட­மையை நிறை­வேற்­று­வ­தற்கு செல்லும் உம்ரா பய­ணி­க­ளி­ட­மி­ருந்து உம்ரா முக­வர்கள் 75 ஆயிரம் ரூபா­வுக்கும், 90 ஆயிரம் ரூபா­வுக்கும் இடை­யி­லான கட்­ட­ணத்­தையே அற­விட வேண்டும். இதே­போன்று ஹஜ் கட்­டணம் 4 இலட்­சத்து 50ஆயிரம் ரூபா­வாக நிர்­ண­யிக்­கப்­ப­ட­வேண்டும். முதன் முறை­யாக ஹஜ் பய­ணிப்­ப­வர்­க­ளுக்கே முன்­னு­ரிமை வழங்­கப்­ப­ட­வேண்டும்.

குறிப்­பிட்ட கடி­தத்தின் பிர­திகள் அமைச்­சர்கள் கபீர் ஹாசிம், சஜித்­பி­ரே­ம­தாச, எம்.எச்.ஏ. ஹலீம், வசந்த அலுவிகார, கருஜயசூரிய, டி.எம்.சுவாமிநாதன், ஜோன் அமரதுங்க மற்றும் ரஞ்ஜித் அலுவிகார, டல்ஜின் அலுவிகார அநுரகுமாரதிசநாயக்க, ஆர். சம்பந்தன் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

-Vidivelli-

Related Post