Breaking
Fri. May 16th, 2025

நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து, அதற்கு பொறுப்பு கூறவேண்டியவர்களை கைதுசெய்யவுள்ளதாக பொலிஸ்மா அதிபர் என்.கே இளங்ககோன் தெரிவித்தார். கைதுசெய்யப்படும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் மாஅதிபர் கூறினார்.

விசாரணைகளின் பின்னர் குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு இதுவரை கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் என்.கே இளங்ககோன் கூறினார்.

Related Post