Breaking
Sat. Jan 18th, 2025

சாளைம்பைக்கேணி 01ஆம், 05ஆம் கொலனி (அமீர் அலி மைதானம்) பிரதேச மக்கள், மிக நீண்டகாலமாக குடிநீர் பெறுவதில் பல அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்தனர். இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக குழாய் கிணறை புனரமைத்து பாவனைக்கு உதவும் வகையில், செயற்படுத்த அதிக பிரயத்தனம் மேற்கொண்டு வந்தனர்.

அந்த வகையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளரும், மயோன் சமூக சேவை அமைப்பின் தலைவருமான றிஸ்லி முஸ்தபாவின் கவனத்திற்கு இப்பிரச்சினை கிராமவாசிகளால் முன்வைக்கப்பட்டது. மக்களின் அத்தியாவாசிய தேவை என்பதை உணர்ந்த அவர், குறித்த பிரதேசத்திற்கு கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். பின்னர், உடனடித்தீர்வாக குழாய் கிணறு திருத்தி, பொருத்துவதற்கு தேவையான சகல விடயங்களையும் முன்னெடுத்து, பிரதேச மக்களுக்கு குடிநீரும் வழங்கி வைக்கப்பட்டது.

இப்பிரச்சினையை தீர்க்க உதவிய மயோன் அமைப்பின் தலைவர் றிஸ்லி முஸ்தபாவுக்கு, பிரதேச மக்கள் நன்றிகளையும் பாராட்டுக்களையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post