Breaking
Fri. Jun 20th, 2025

பாணந்­துறை தெற்கு பகுதி வீடொன்றில் இருந்து உயி­ரி­ழந்த இரண்டு சகோ­த­ரி­க­ளு­டை­யது என சந்­தே­கிக்­கப்­படும் மண்­டை­யோ­டு­களும் மனித எலும்­புக்­கூ­டு­களும் நேற்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன.

வயோ­திபப் பெண்­க­ளான இரு­வரும் சில மாதங்­க­ளுக்கு முன்னர் உயி­ரி­ழந்­தி­ருக்­கலாம் என பொலிஸார் சந்­தே­கிக்­கின்­றனர்.

சுமார் இரண்டு வரு­டங்­க­ளுக்கு பின்னர் குறித்த தமது சகோ­த­ரிகள் வாழ்ந்த வீட்­டுக்கு வந்து பார்த்த போது சகோ­த­ரி­களின் மண்­டை­யோ­டு­களும் மனித எலும்­புக்­கூ­டு­களும் காணப்­பட்­ட­தாக பெண்­களின் சகோ­தரர் பொலிஸில் முறைப்­பாடு செய்­துள்ளார்.

இந்­த­நி­லையில் மரண விசா­ரணை இடம்­பெறும் வரை சம்­பவ இடத்தில் பொலிஸ் பாது­காப்பு போடப்பட்டுள்ளதுடன் பாணந்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related Post