Breaking
Sat. May 17th, 2025

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் (முன்னைய அரசாங்கத்தின்) பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து, புத்தளம், அஷ்ரப் ஞாபகார்த்த பூங்காவுக்கு, சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியில், விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

சிறுவர் பூங்காவின் விளையாட்டு செயற்பாடுகளுக்கான உபகரணங்கள் சேதமடைந்திருந்த நிலையில், அவற்றை சீர்செய்ய வேண்டியதன் அவசியம் தொடர்பில், கட்சியின் புத்தளம் மாவட்ட செயற்குழுவினால், தலைவர் ரிஷாட் பதியுதீனிடம் எத்திவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தலைவரின் விசேட பணிப்புரையின் கீழ், மேற்படி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வேலைத்திட்டங்களை பார்வையிடுவதற்காக, புத்தளம் மாவட்ட செயற்குழுவின் சார்பாக, கட்சியின் உயர்பீட உறுப்பினர்களான M.H.முஹம்மத், AO அலிகான் மற்றும் முன்னாள் நகரசபை உறுப்பினர் அஸ்கீன், அமைப்பாளர் M.M.M.முர்ஷித், ரசீன் ஆசிரியர், ஆதரவாளர் இல்ஹாம் ஆகியோர் கள விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post