இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பலமான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் எனது இலங்கை விஜயம் அமையும் என்று நம்புகிறேன் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இலங்கை விஜயம் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் தளத்தில் மேற்கொண்டுள்ள பதிவிலேயே இதனை தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்வது தொடர்பில் ஆர்வம் காட்டி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
“”எனது இலங்கை விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவினை மேலும் வலுப்படுத்தக்கூடிய வகையில் அமையும். நான் இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளதுடன் மஹாபோதி பகுதிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் செய்யவுள்ளேன். மிகவும் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் நான் இலங்கைக்கு விஜயம் செய்கின்றேன் ” என்று இந்திய பிரதமர் தனது டுவிட்டர் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
எதிர்வரும் 13ஆம் திகதி மோடி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜய த்தை மேற்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.