Breaking
Sun. Jun 15th, 2025

 முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கு 21 வாக­னங்கள் வழங்­கப்­பட்­டுள்­ள­துடன் 213 பாது­காப்பு உத்தி­யோ­கத்­தர்­களும் வழங்­கப்­பட்­டுள்­ளனர். இவ்­வாறு வச­தி­களை வைத்­துக்­கொண்டு அவர் தனக்கு பாது­காப்பு இல்லை என்று கூறு­கின்றார் என்று அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ன தெரி­வித்தார்.

இந்­நி­லையில் 2007 ஆம் ஆண்டு வழங்­கப்­பட்­டுள்ள உயர்­நீ­தி­மன்ற தீர்ப்பின் பிர­காரம் மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்­கான வாக­னங்­க­ளையும் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்­க­ளையும் குறைக்­க­வேண்­டிய நிலையும் ஏற்­ப­டலாம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்,

தனக்கு வாக­னங்­களும் பாது­காப்பும் போது­மா­ன­தாக இல்லை என்று முன்னாள் ஜனா­தி­பதி தெரி­வித்­துள்ளார். இந்­நி­லையில் முன்னாள் ஜனா­தி­பதி ஒரு­வ­ருக்கு மூன்று வாக­னங்­களும் உத்­தி­யோ­க­பூர்வ இல்­லமும் எரி­பொ­ருளும் வழங்­க­வேண்டும் என்று 2007 ஆம் ஆண்டு உயர்­நீ­தி­மன்ற தீர்ப்பு ஒன்று உள்­ளது.

எனினும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கு 21 வாக­னங்கள் வழங்­கப்­பட்­டுள்­ள­துடன் 213 பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்­களும் வழங்­கப்­பட்­டுள்­ளனர். டிபென்டர் ரக வாகனம் ஒரு பஸ் மற்றும் டபல் கெப் உள்­ளிட்ட 21 வாக­னங்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. எரி­பொ­ருளும் வழங்­கப்­ப­டு­கின்­றது. எனினும் அவர் அது போதாது என்றும் தனக்கு பாது­காப்பு இல்லை என்றும் குறிப்­பிட்­டுள்ளார்.

ஆனால் தற்­போ­தைய நிலை­மையில் உயர்நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் மஹிந்த ராஜபக் ஷவுக்கு வழங்கியுள்ள வாகனங்களையும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் குறைக்கவேண்டிய நிலையும் ஏற்படலாம் என்றார்.

Related Post