Breaking
Sat. Jun 21st, 2025

நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நிலைப்பாட்டிலிருந்த அரசியல் கட்சிகள் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் குழுவொன்று அண்மையில் இது தொடர்பில் பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபட்டிருந்ததாகத் தெரியவந்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வ வாசஸ்தலம், வாகனம், செயலகம், பாதுகாப்பு அதிகாரிகள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும் என்பது அரசியல் சட்டத்தில் அனுமதிக்கப்பட்டதொன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபாய குழுவினர் மேற்கொண்டதாக கூறப்படும் சதி முயற்சிக்கான விசாரணை அறிக்கை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், சட்டமா அதிபரின் ஆலோசனை அறிக்கை வெளியானவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை முன்னகர்த்தப்படும் என தகவல்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post