Breaking
Thu. Jun 19th, 2025

மாற்றியமைக்கப்பட்ட தேசிய கொடியை நானும் ஏந்தியிருந்தேன் எனவும் ஆணைக்குழுவிற்கு எதிரில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாற்றியமைக்கப்பட்ட தேசிய கொடிகளை சிலர் கொண்டு வந்திருந்தனர். அவற்றில் சிறிய கொடிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

அத்துடன் ஊடகங்கள் வாயிலாக அழைப்பு விடுக்கப்பட்டு பொது இடம் ஒன்றில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வோர் பற்றி அதன் ஏற்பாட்டாளர்களுக்கு முழுமையான பொறுப்பை ஏற்க முடியாது.

எவ்வாறாயினும், நாட்டின் தேசிய அடையாளமான தேசியக் கொடி தனது தலைமையில் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மாற்றியமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது குறித்து தான் கவலையடைவதாகவும் கம்மன்பில தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Post