செய்திப் பிரிவு
நேற்று மாலை சுமார் 6 மணியளவில் குருநாகலில் இருந்து வந்த வேன் மோதி பாடசாலை மாணவி ஒருவர் பலியாகியுள்ளார்.
குருநாகலில் இருந்து வந்த வானுடன் குறித்த சிறுமி மோதியதில் இச்சம்பம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் ஒன்பதாம் தரத்தில் கல்வி கற்கும் மாவடிவேம்பைச் சேர்ந்த சிவயோகன் யசோதா எனும் மாணவியே உயிரிழந்துள்ளார்.
இந்தவிபத்து இடம்பெற்ற இடத்தில் ஒன்றுகூடிய பொதுமக்கள் வாகனத்தை தீயிட்டு கொழுத்தியுள்ளதாக தெரியவருகின்றது.