Breaking
Wed. Apr 24th, 2024

வறு­மைக்கு எதி­ராகப் போராடி மக்­களின் வாழ்­வா­தா­ரத்­தினை மேம்­ப­டுத்த ஜனா­தி­பதி அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்ள ‘திவி­நெ­கும’ (வாழ்வின் எழுச்சி) வேலைத்­திட்டம் வறு­மையற்ற இலங்­கையை உரு­வாக்கும் என்­பதில் சந்­தே­க­மில்லை என கைத்­தொழில் மற்றும் வர்த்­தகத்து­றை அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் தெரி­வித்தார்.

மஹிந்த சிந்­த­னைக்கு அமை­வாக பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சின் வழி­காட்­ட­லுடன் வாழ்வின் எழுச்சி திட்டம் (திவி­நெ­கும) நாட­ளா­விய ரீதியில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட நிகழ்வு அண்­மையில் வவு­னியா பிர­தேச சபை சமுர்த்தி சங்­கத்தில் நடை­பெற்­றது. இந்­நி­கழ்­வினை பாரம்­ப­ரிய கைத்­தொ­ழில் மற்றும் சிறு­தொழில் முயற்சி அபி­வி­ருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவா­னந்தா பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொண்டு ஆரம்­பித்து வைத்தார். இந்­நி­கழ்வில் அமைச்சர் ரிஷாத் விசேட அதி­தி­யாகக் கலந்­துக்­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்

தார். அமைச்சர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்:

வட மாகாண மக்­களை மேம்­ப­டுத்­து­வ­தற்­கான மற்­றொரு அபி­வி­ருத்தி முயற்­சி­யான வாழ்வின் எழுச்சித் திட்­டம் (திவி­நெ­கும) பொரு­ளா­தார அபி­விருத்தி அமைச்சர் பஷில் ராஜ­பக் ஷ மூலம் மஹிந்த சிந்­த­னைக்கு அமை­வாக பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சின் வழி­காட்­ட­லுடன் நாடளாவிய ரீதியில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது.

வாழ்வின் எழுச்சித் திட்­டத்தை வெற்­றி­க­ர­மான முறையில் நடை­மு­றைப்­ப­டுத்து­வதன் மூலம் கால்­நடை உற்­பத்தித் தொழிலில் ஈடு­பட்டு வரும் விவ­சாயக் குடும்­பங்­க­ளுக்கு சிறந்­த­தொரு வாழ்க்­கையை அமைத்துக் கொடுப்­ப­தற்கு அர­சாங்கம் வெற்­றி­க­ர­மாக நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கி­றது. இத்­திட்­டத்தின் மூலம் சிறிய மற்றும் நடுத்­தர குடிசைக் கைத்­தொ­ழில்கள் அபி­வி­ருத்தி செய்­யப்­ப­டு­வ­துடன் இத­னூ­டாக தனி­நபர் மட்­டு­மல்­லாது நாட்டின் பொரு­ளா­தா­ரமும் மேம்­ப­டும்.

இதே­வேளை ஐந்து மில்­லியன் மக்கள் இதன் விளை­வாக பய­ன­டை­வார்கள் மேலும் 1.8 மில்­லியன் குடும்­பங்கள் திவி­நெ­கும மூலம் வறு­மைக்கு வெளியே எடுத்துச் செல்­லப்­ப­டு­வார்கள் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

2016ஆம் ஆண்டில் வறு­மை­யற்ற இலங்­கையை உரு­வாக்கும் இலக்­கினை அடை­வதன் ஊடாக சமு­தாய சமத்­துவத்தை ஏற்­ப­டுத்தி வறுமைக்கோட்­டுக்குள் வாழும் மக்­களை சமூ­கத்தில்கௌர­வமான பிர­ஜை­க­ளாக உரு­வாக்க அனைவரும் முயற்­சிக்க வேண்டும் எனவும் அமைச்சர் தெரி­வித்தார்.

 

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *