Breaking
Tue. Apr 16th, 2024
நிந்தவூர், அட்டப்பள்ளம் தமிழ் மக்களின் நீண்ட கால கோரிக்கையாகவிருந்த மயான பூமிக்கான நிரந்தர தீர்வினை பெற்றுக் கொடுக்கும் வகையில், நேற்றைய தினம் (02) குறித்த மயான பூமி உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
 
அட்டப்பள்ளம் பிரதேச மக்களின் மிக நீண்ட நாள் கோரிக்கையினை கவனத்தில் கொண்டு, நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தாஹிரின் ஆலோசனையின் பேரில், நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சேகு இஸ்மாயில் முஹம்மட் றியாஸின் அன்பளிப்பில், இம்மக்களின் கோரிக்கையினை விரைவாக நிவர்த்தி செய்து, மக்கள் பாவனைக்காக சுற்றுமதில் அமைக்கும் பணிகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
 
இந் நீண்ட நாள் கோரிக்கைக்கான தீர்வானது, நிந்தவூர் பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்ற தமிழ் – முஸ்லிம் சமூகங்களுக்கிடைலான புரிந்துணர்வு மற்றும் சகவாழ்வினை மேலும் வழுப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
 
நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.எல்.எம்.கமல் நெத்மினி, கெளரவ அதிதிகளாக நிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப், நிந்தவூர் பிரதேச சபையின் உதவி தவிசாளர் வை.எல்.சுலைமா லெப்பை மற்றும் நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 

Related Post