Breaking
Wed. Apr 24th, 2024

வடக்கு கிழக்­குக்கு வெளியே உள்ள முஸ்­லிம்­களில் பெரும்­பான்­மை­யினர் ஐ.தே. கட்­சிக்கே வாக்­க­ளிக்­கின்­றனர். ஆனால் இன்று வட கிழக்­கிற்கு வெளியே வாழ்­கின்ற முஸ்­லிம்கள் பேரி­ன­வா­தி­களின் இன­வாத செயல்­க­ளினால் பெரிதும் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கின்­ற­போது முஸ்­லிம்­களின் பெரும்­பான்மை வாக்­கு­களைப் பெற்ற ஐ.தே.கட்சி ஏன் பேசாமல் இருக்­கி­றது? என அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் செய­லாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது;

இலங்­கை­யி­லுள்ள 20 இலட்சம் முஸ்­லிம்­களில் மூன்றில் இரண்டு பங்­கினர் வட­கி­ழக்­குக்கு வெளி­யிலேயே வாழ்­கின்­றனர். முஸ்லிம் அர­சியல் கட்­சி­களைப் பொறுத்­த­வ­ரையில் அவர்­க­ளது வாக்கு வங்கி வட கிழக்­கிலேயே இருக்­கி­றது. வட­கி­ழக்­குக்கு வெளியே ஐ.தே. கட்­சிக்கு வாக்­க­ளித்த முஸ்லிம் மக்கள் கட்­சி­யி­ட­மி­ருந்து அபி­வி­ருத்­தியை எதிர்­பார்க்­காமல் இருக்­கலாம். ஆனால் இந்த இக்­கட்­டான கால­கட்­டத்தில் முஸ்­லிம்­க­ளுக்­காக பேசு­கின்ற பணியைக் கூட ஏன் அவர்­களால் செய்ய முடி­யாமல் இருக்­கி­றது.

பாரா­ளு­மன்­றத்தில் எப்­போ­தா­வது ஐ.தே.கட்சி முஸ்­லிம்­க­ளுக்­காக வாய்­தி­றந்தால் அதில் அரை­வாசி நேரம் முஸ்லிம் அமைச்­சர்­களை ஏசு­வ­திலேயே செல­வ­ழி­கி­றது. முஸ்லிம் அமைச்­சர்கள் என்ன செய்­கி­றார்கள் என்­பது அவர்­க­ளுக்கு வாக்­க­ளித்த மக்­க­ளுக்­கு­ரிய விட­ய­மாகும். ஆனால் ஐ.தே.க. முஸ்­லிம்­க­ளிடம் வாக்கு கோரு­வது முஸ்­லிம்­க­ளுக்கு பாதிப்­புகள் ஏற்­ப­டு­கின்ற போது முஸ்லிம் அமைச்­சர்­க­ளுக்கு ஏசு­வ­தற்­கா­கவா என்று வினவ விரும்­பு­கின்றோம்.

இன்று முஸ்லிம் வாக்­கு­களில் பெரும்­பாலும் தங்­கி­யி­ருக்­காத ஆளும் கட்­சியில் இருக்­கின்ற அமைச்­சர்கள் வாசு­தேவ நாண­யக்­கார, டிலான் பெரேரா, ராஜித சேனா­ரத்ன, ரெஜி­னோல்­கூரே, நிமல் சிறிபால டி சில்வா, அதா­வுத சென­வி­ரத்ன, ஜனக பண்­டார தென்­னகோன் மற்றும் பிர­தமர் டி.எம்.ஜய­ரத்ன போன்­ற­வர்கள் முஸ்­லிம்­க­ளுக்­காக பல­மாக குரல் கொடுக்­கின்ற போது ஐ.தே.கட்சி வாய்­மூ­டி­யி­ருப்­ப­தை­யிட்டு வாக்­க­ளிக்­கின்ற முஸ்­லிம்கள் ஏன் கேள்வி எழுப்பக் கூடாது.

முஸ்­லிம்­களின் பிரச்­சினைகள் பற்றி ரணில் விக்­கி­ர­ம­சிங்க இரண்­டொரு முறை பாரா­ளு­மன்­றத்தில் பேசி­யி­ருக்­கிறார். இதில் பாதி நேரம் முஸ்லிம் அமைச்­சர்­க­ளுக்கு ஏசு­வ­திலேயே செல­விட்­டி­ருக்­கின்றார்.

முஸ்­லிம்­களின் பிரச்­சினை பற்றி கரு ஜய­சூ­ரிய பேச­வில்லை. திஸ்ஸ அத்­த­நா­யக்க பேச­வில்லை. சஜித் பிரே­ம­தாஸ பேச­வில்லை என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

வாக்­க­ளித்­தாலும் வாக்­க­ளிக்கா விட்­டாலும் எதை­யா­வது பேச வேண்­டு­மென்றால் அதை முஸ்லிம் அமைச்­சர்கள் தான் செய்ய வேண்டும். ஏச்சு வாங்­கு­வ­தென்­றாலும் முஸ்லிம் அமைச்­சர்கள் தான் வாங்க வேண்டும் என்­கின்ற நிலைமை இந்த சமு­தா­யத்தை பேரி­ன­வாத கட்­சிகள் இன்னும் ஏமாற்­று­வ­தற்கே துணை போகி­றது.

எனவே முஸ்லிம் சமு­தாயம் சிந்­தித்து தமக்­கென்று சொந்தக் காலில் நிற்கக் கூடிய பிர­தி­நி­தித்­து­வங்­களை உரு­வாக்க வேண்டும். இன்று இருக்­கின்ற பிர­தி­நி­தித்­து­வங்­களுள் உண்­மை­யா­கவே சமு­தா­யத்­துக்கு உழைக்­கின்­ற­வர்­களை அடை­யாளம் கண்டு அவர்­க­ளுடன் புதி­ய­வர்­க­ளையும் இணைத்து தமது எதிர்­கால பிர­தி­நி­தி­க­ளாக்­கு­வ­தற்கு முயற்­சிக்க வேண்டும்.

அதே நேரம் யார் யாரெல்லாம் முஸ்லிம் வாக்­கு­ களைப் பெற்றுக்கொண்டு கதி­ரை­களை சூடாக்­கு­கி­றார்­களோ அவர்­களை ஓய்­வெ­டுக்க அனுப்ப வேண்டும். ஒட்டு மொத்தத்தில் யாரும் எதுவும் செய் யவில்லை என்பது தான் முஸ்லிம் சமுதாயத்தின் தீர் ப்பென்றால் புதியவர்களையாவது முழுமையாகக் கொண்டு வரவேண்டும். இவை எதுவுமில்லாமல் வட கிழக்குக்கு வெளியே வாழுகின்ற முஸ்லிம்கள் ஐ.தே. க.வுக்கு வாக்களித்து விட்டு தமக்காக பேசுவதற்கு யா ருமில்லையென்று அல்லல்படும் நிலை இனிமே லும் தொடரக் கூடாது.  (வீரகேசரி 24-05-2014 ஏ.ஆர்.ஏ. பரீல்)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *