Breaking
Wed. Apr 24th, 2024
 
வட மாகாண ஆளுநரால், மன்னார் பிரதேச சபை தவிசாளர் நீக்கப்பட்டமையை ஆட்சேபித்து, தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிரினால், இன்று (28), கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றில் ரிட் (Writ) மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு நாளை (29) இடம்பெறவுள்ள நிலையில், குறித்த ரிட் மனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
நாளை இடம்பெறவுள்ள புதிய தவிசாளருக்கான தெரிவினை இடைநிறுத்தக் கோரியும், தவிசாளர் மற்றும் உறுப்புரிமையிலிருந்து தாம் நீக்கப்பட்டமை சட்டத்திற்கு முரணானது எனவும், அவற்றுக்கெதிராக தடையுத்தரவு பிறப்பிக்குமாறும் குறித்த ரிட் மனுவில் கோரப்பட்டுள்ளது.
 
தவிசாளர் முஜாஹிர் சார்பில், சட்டத்தரணிகளான என்.எம்.ஷஹீட், சந்தீப கம்மதிகே ஆகியோரினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு, நாளை (29) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post