3 முஸ்லீம் மாணவர்கள் படுகொலை. மூடி மறைத்த விபச்சார ஊடகங்கள்!

0
937




அமெரிக்காவின் நார்த் கரோலினாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பாலஸ்தீனிய முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த துயர சம்பவம் இன்று நடந்துள்ளது. பரகத் வயது 23, அவரது மனைவி யூசுர் சாலிஹா வயது 21, தங்கை ரிஜான் அபு சாலிஹா வயது 19 இந்த மூன்று இளம் தளிர்களை வீட்டீன் உள்ளே வந்து தலையில் சுட்டு கொன்றிருக்கிறான் ஒரு கொடியவன். அவனை போலீசார் கைது செய்துள்ளனர். 46 வயதான ஸ்டிபன் ஹீக்ஸ் என்று போலிஸாரால் அறியப்பட்டுள்ளான்.

இந்த மூன்று பாலஸ்தீனியர்களுமே எப்போதும் சமூக சேவைகளில் மிகவும் அக்கறை கொண்டவர்கள். இந்த குடும்பம் பொது மக்களுக்கு சாரிட்டி மூலம் உணவு விநியோகத்திலும் அதிகம் ஈடுபடும். பாலஸ்தீனிலும் ஒரு மருத்துவமனையை நிர்வகிக்க ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

பரகத் மருத்துவ படிப்பை தேர்ந்தெடுத்து அமெரிக்க பல்கலைக் கழகத்தில் படித்து வந்தார். அவரது மனைவியும்
கல்லூரியில் படித்து வரும் மாணவி. இரண்டு மாதம் முன்பு தான் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்தது. வாழ வேண்டிய இந்த இளம் குருத்துகளை பாவிகள்
அழித்து விட்டனர்.

இவர் நடத்தி வரும் சமூக வலை தளம் ட்விட்டரில் ஒரு வாரம் முன்பு அவர் பதிந்த ஒரு செய்தி:  ‘பாலஸ்தீனியர்களை கொல்வோம்’ என்று ஒரு சாராரும் ‘யூதர்களை கொல்வோம்’ என்று ஒரு சாராரும் அவரவர் நிலைப்பாட்டில் இருக்கின்றனர். இது மிகவும் தவறான அணுகு முறை. இது போன்ற கொலைகளால் எந்த பிரச்னையும் தீரப் போவதில்லை.’ என்று ட்விட் செய்துள்ளார்.

இவர்கள் சமூக சேவை செய்ததைத் தவிர வேறு எந்த குற்றமும் செய்யவில்லை. இவர்கள் பாலஸ்தீனியர்கள். இந்த மூன்று பேரையும் கொல்வதற்கு இது போதும் இஸ்ரேலியர்களுக்கு.

வாழ வேண்டிய இளம் தளிர்கள் இன்று கருகி விட்டன. வழக்கம் போல் மீடியாக்கள் இந்த செய்தியை கண்டு கொள்ளாமல் விட்டு விடும். இவர்களின் மறுமை வாழ்வு சிறப்பாக அமைய நாமும் பிரார்திப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here