Breaking
Wed. Jun 18th, 2025

எட்­டு­வ­யது சிறு­மி­யைப்­பா­லியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தி­ய­தாக சொல்­லப்­படும் 25 வயது இளைஞன் ஒரு­வ­னைக்­கைது செய்­துள்­ள­தாக வண்­ணாத்­தி­வில்லு பொலிஸார் தெரி­வித்­தனர். வண்­ணாத்­தி­வில்லு பொலிஸ் பிரி­விற்­குட்­பட்ட கரை­தீவு பிர­தே­சத்தை சேர்ந்த இளைஞர் ஒரு­வரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்­ள­வ­ராவார்

வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட சிறுமி யின் தாயின் சகோ­தரி ஒரு­வ­ரு­டைய கண­வரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்­ள­வ­ராவார். தான் தரும் பணத்தை தாயிடம் கொடுக்­கு­மாறு கூறி சிறு­மியை ஏமாற்றி சந்­தேக நபர் சிறு­மியை தனது வீட்­டுக்கு அழைத்து சென்றே இவ்­வாறு குற்றம் புரிந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

தமது மக­ளுக்கு ஏற்­பட்ட இந்த கொடு­மை­யினை அறிந்து கொண்­டுள்ள சிறு­மியின் தாய் இது தொடர்பில் வண்­ணாத்­தி­வில்லு பொலிஸ் நிலை­யத்தில் செய்த முறைப்­பாட்­டை­ய­டுத்தே சந்­தேக நபர் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

குறித்த சிறுமி வைத்­திய பரி­சோ­த­னைக்­காக புத்­தளம் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தோடு, சந்­தேக நபரை புத்­தளம் நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்த வண்­ணாத்­தி­வில்லு பொலிஸார் இதற்­கான நட வடிக்கைகளை மேற்கொண்டு வரு கின்றனர்.

Related Post