Breaking
Sun. Dec 7th, 2025

திருவண்ணாமலையின் விசேட முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

தமது குடும்பங்களுடன் மீளிணைக்க வேண்டும் என்று கோரியே இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று பேர் தமது மனைவி மற்றும் பிள்ளைகள் இந்தியாவில் எங்கிருக்கிறார்கள் என்ற விடயம் தெரியாமலேயே இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். இந்தப்போராட்டத்தில் 24 பேர் இணைந்துள்ளனர்.

தாம் கடந்த மூன்று மாதங்களாக எவ்வித குற்றச்சாட்டுகளும் இன்றி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post