ACMC Membership Registration | reg.acmc.lk | அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் உறுப்பினராக இணைந்துகொள்ள
Click Here to Join with ACMC or Register your Membership on All Ceylon Makkal Congress…
மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்! மானிடரின் நிலையில்லா வாழ்வினை அடிக்கடி நிகழும் எதிர்பாராத மரணங்கள் உணர்த்துவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். வீதி அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் பிரதம பொறியியலாளரும், அக்கரைப்பற்று மாநகர சபையின் உறுப்பினருமான சிராஜுதீனின் மரணச் செய்தி குறித்து, அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது பற்றித் தெரிவித்த அவர், “துன்யாவின் அந்தஸ்துக்களை பொருட்படுத்தாத மானிட நேயன் மர்ஹூம் சிராஜுதீன்….
திருகோணமலை மாவட்டம், புல்மோட்டை, குச்சவெளி பகுதிகளுக்கு இன்றைய தினம் (03) விஜயம் மேற்கொண்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பிரதேச வாழ் மக்களை சந்தித்து சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.
உள்ளூராட்சித் தேர்தல் முறையில் மாற்றம் செய்யாவிட்டால், ஜனநாயகம் விலைபேசப்படுவதை நிறுத்த முடியாமல் போய்விடுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் (21) உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது; “நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில், எமது கட்சி நாடு முழுவதும் 140 ஆசனங்களை வென்றுள்ளது. இந்த வெற்றிக்காக வாக்களித்த சகலருக்கும் எனது நன்றிகள். எந்த வெற்றியைப் பெற்றாலும் பல சபைகளில் ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பெரிய கட்சிகள், சுயேச்சைக்…
கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) அம்பாறைக்கு விஜயம் மேற்கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், தொடர்ந்து இரு தினங்களாக (13,14) மாவட்டத்தின் பல பகுதிகளில், உள்ளூராட்சி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார். அந்தவகையில், அக்கரைப்பற்று மாநகர சபை, அக்கரைப்பற்று பிரதேச சபை, சம்மாந்துறை பிரதேச சபை, இறக்காமம் பிரதேச சபை, அட்டாளைச்சேனை பிரதேச சபை, பொத்துவில் பிரதேச சபை, காரைதீவு பிரதேச சபை, நாவிதன்வெளி பிரதேச சபை மற்றும் நிந்தவூர் பிரதேச…
புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களின் கட்சிக் கிளை காரியாலயம் திறந்து வைக்கும் நிகழ்வு மற்றும் மக்கள் சந்திப்புக்களில் தலைவர் ரிஷாட் பங்கேற்பு! கடந்த வெள்ளிக்கிழமை (11) புத்தளம் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் பிரதேச சபை, ஆரச்சிக்கட்டுவ பிரதேச சபை, கல்பிட்டிய பிரதேச சபை ஆகியவற்றில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும்…
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், அநியாயமாக கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுங்கள் – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்! பயங்கரவாத தடைச் சட்டத்தின் (PTA) கீழ் அநியாயமாகக் கைது செய்யப்பட்டு, பல ஆண்டுகளாக சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளார். குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலம் தொடர்பான விவாதம் இன்று (08) பாராளுமன்றத்தில்…
கொழும்பு மாநகர சபை, கொலன்னாவ நகர சபை, கொடிகாவத்த – முல்லேரியா பிரதேச சபைகளில் ஜக்கிய மக்கள் சக்தி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடலொன்று இன்று (03) கொழும்பில் இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலின் போது, உள்ளூராட்சி தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், தெஹிவளை-கல்கிஸ்ஸ மநாகர சபை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டமை…
மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்! சர்வதேச அளவில் முஸ்லிம்கள் பாரிய சவால்களை எதிர்கொள்ளும் நிலையிலேயே, முஸ்லிம்கள் இம்முறை புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாட நேர்ந்துள்ளதாகவும் நெருக்கடிகள் நீங்கி, நிம்மதி ஏற்பட இந்நாளில் பிரார்த்திக்கும்படியும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு அவர் வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது, “முஸ்லிம்களுக்கு எதிரான ஸியோனிஸவாதிகளின் அத்துமீறல்கள் எல்லைமீறியுள்ளன. காஸாவில் ஈவிரக்கமின்றி இனவழிப்புச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் இஸ்ரேலிய அரசு,…
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சாங்கை இன்றைய தினம் (26) கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது, சமகால அரசியல் விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, “இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவருடன், எமது நீண்டகால தொடர்புகள் மற்றும் நிலைபேறான தன்மை குறித்து ஆக்கபூர்வமான கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இதன்போது,…
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கான அமைப்பாளர் பதவியிலிருந்தும், கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும் ஏ.கே.அமீர் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் எஸ்.சுபைர்தீன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில், அவர் மேலும் தெரிவிக்கையில், “இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது, அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் நிலையில், கட்சியின் அமைப்பாளராக செயற்பட்ட ஏ.கே.அமீர் கட்சியின் தீர்மானத்தை மீறி, சுயேட்சைக் குழுவொன்றின் வேட்பாளராக வேட்புமனுவை தாக்கல் செய்தமையின் காரணமாக, அவர் அமைப்பாளர்…
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி, 13 மாவட்டங்களில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை வியாழக்கிழமை (20) அந்தந்த மாவட்ட செயலகங்களில் தாக்கல் செய்தது. அந்தவகையில், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, புத்தளம், குருநாகல், அனுராதபுரம், கண்டி, மாத்தளை, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, களுத்துறை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தனது மயில் சின்னத்தில் தனித்தும், ஐக்கிய மக்கள் சக்தியுடன்…
“இன்றைய தினம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவச் செல்வங்களை வாழ்த்துவதுடன், நம்பிக்கையுடன் பரீட்சையில் தோற்றி, சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்..!”
நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக அம்பாறை, வவுனியா, திருகோணமலை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் உள்ள போட்டியிடும் சபைகளுக்கான கட்டுப்பணம், கட்சியின் மாவட்ட பிரதிநிதிகளினால் செலுத்தப்பட்டது. அந்தவகையில், அம்பாரை மாவட்டத்தில் உள்ள ஒன்பது சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்ரப் தாஹிர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர். அதேபோன்று, வவுனியா…
வடக்கு, கிழக்கில் சிதைவடைந்துள்ள பாதைகள், பாலங்களை புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (07) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சு ஆகியவற்றின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தனது உரையில், “ஒலுவில் துறைமுகம் தொடர்பில் இந்த வரவுசெலவுத்…
தலைவர் ரிஷாட் சபையில் கோரிக்கை! ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் அம்பாறை மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (05) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு, கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு ஆகியவற்றின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே…
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்! ரமழானின் அருட்கொடைகள் சகலருக்கும் கிடைப்பதுடன், நோன்பு கால அமல்களில் சிறப்பாக ஈடுபடுவதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ்! அருள்பாலிக்க பிரார்த்திப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். புனித ரமழானை வரவேற்று, அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “அல்லாஹுத்தஆலா ரமழான் மாத அமல்களுக்கு சிறப்புக் கூலி தருவதாக வாக்களித்துள்ளான். நமது முன்னோர்களும் இந்த சங்கை மிகுந்த ரமழானின் சிறப்பால் உயர்வடைந்ததாகவும் புனித…
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான விண்ணப்பம் கோரல்! 2025 இல் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிட ஆர்வமுள்ள அபேட்சகர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. போட்டியிட விரும்புவோர் கீழே இணைக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப்படிவம் போன்றதொன்றை தயார் செய்து, 15.02.2025 ஆம் திகதிக்கு முன்னர் பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். S.SubairdeenSecretary GeneralAll Ceylon Makkal CongressNo.56, 1st Floor,Supun Arcade Residencies,Galle Road, Colombo 06.மின்னஞ்சல் : acmchqcolombo@gmail.com Click Here and Downloads…
மட்டக்களப்பு, கல்குடா, இன்டர்நெஷெனல் பாலர் பாடசாலையின் 18வது விடுகை விழா, கடந்த 12ஆம் திகதி, ஓட்டமாவடி தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான M.S.S.அமீர் அலி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், குறித்த பாடசாலையின் மாணவர்கள் நலன் கருதி Interactive Flat Panel Display (smart board) ஒன்றினையும் அன்பளிப்பாக வழங்கி வைத்தார்.
தோப்பூர், தாருள் ஹிக்மா பாலர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும், கிண்ணியா நகர சபையின் முன்னாள் மேயருமான Dr.ஹில்மி மஹ்ரூப் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
வவுனியா, நெளுக்குளம் ஸ்ரீ முருகன் ஆலயத்தின் ஏற்பாட்டில், பண்பாட்டுப் பொங்கல் பெருவிழா -2025 ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்றது. இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான முத்து முஹம்மட் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தார்.
நிந்தவூர் பர்சானா பாலர் பாடசாலை விடுகை விழா நிகழ்வில் (18) அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார்.
இன்றைய தினம் (16) மன்னார், முசலி பிரதேசத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது வாக்களித்த பாலைக்குளி, முள்ளிக்குளம், மரிச்சிக்கட்டி, கரடிக்குழி மற்றும் கொண்டச்சி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்புக்களில் கலந்துகொண்டார். இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் முத்து முஹம்மட், கட்சியின் உயர்பீட உறுப்பினர் Dr.மிக்றா, முசலி பிரதேச சபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் பைறூஸ் மற்றும் கட்சியின்…
அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் ஒருங்கிணைப்புக்குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா தலைமையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் (16) பிரதேச செயலாளர் PTM இர்பானின் நெறிப்படுத்தலின் கீழ் இடம்பெற்றது. இதன்போதே, அகில இலங்கை மக்கள் காங்கிஸின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிரினால் அட்டாளைச்சேனை பிரதேச வீதிகள், வடிகான்கள் அபிவிருத்திகள் சம்பந்தமாக முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததுடன், கடந்த 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர், விஷேட நிதி ஒதுக்கீட்டில் ரணில் விக்ரமசிங்கவினால் நடைமுறைப்படுத்துப்பட்ட ஒலுவில்…
மன்னார் மாவட்டத்தின் முருங்கன் மற்றும் சிலாவத்துறை பிரதேச வைத்தியசாலைகளுக்கு வியாழக்கிழமை (16) விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், வைத்தியசாலைகளுக்கு தேவையான சில அத்தியாவசியப் பொருட்களையும் கையளித்தார். இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் முத்து முஹம்மட், கட்சியின் உயர்பீட உறுப்பினர் Dr.மிக்றா மற்றும் Dr. ஒஸ்மன், Dr. கியாஸ், கட்சியின் முக்கியஸ்தர்களானா பைறூஸ், சாஹிர், ஞானராஜ், சந்திரிக்கா, ராபி மௌலவி, ஜௌசி, ஹலீம் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
– அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்! சமூக சிந்தனையும் தற்றுணிவும்கொண்ட ஒரு கல்விமானை எமது சமூகம் இழந்து நிற்கின்றது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரவித்துள்ளார். முன்னாள் மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளரும் நாடறிந்த கல்விமானுமாகிய எம்.எம்.சியான் அவர்களின் மறைவு தொடர்பில், அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “கல்வியையே தன்னுடைய வாழ்க்கையாகக்கொண்ட மர்ஹூம் எம்.எம்.சியான் அவர்கள், மன்னார், தாராபுரத்தை…
ஏறாவூர், ஐயன்கேணி லிட்டில் வொண்டர் முன்பள்ளியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் மாணவர்களின் விடுகை நிகழ்வும் ஞாயிற்றுக்கிழமை (12) ஏறாவூர் மட்/மம/ அல் ஜுப்ரியா பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சருமான M.S.சுபைர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறார்களை வாழ்த்தி பரிசில்களையும் வழங்கிவைத்தார்.
கிண்ணியா பிரதேச சபைக்குட்பட்ட, ஆயிலியடி சாஹிரா முன்பள்ளியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும் கிண்ணியா நகரசபையின் முன்னாள் மேயருமான Dr.ஹில்மி மஹ்ரூப் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் முத்து முஹம்மட் அனுதாபம்! முன்னாள் மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் சியானின் மறைவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் முத்து முஹம்மட் அனுதாபம் தெரிவித்துள்ளார். அவர் தனது அறிக்கையில், “காலம் சென்ற கல்விமான் முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர் சியான் அவர்களின் மறைவு கல்வி உலகிற்கு பேரிழப்பாகும். புத்தளம், மன்னார் கல்வி வலயங்களில் பணியாற்றி பலரது வளர்ச்சிக்கு தூணாகவும் துணையாகவும் இருந்தவர். இவரது இழப்பால் துயரும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவிப்பதுடன், அவரது பாவங்கள்…
களுத்துறை அஹதியா பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா, செவ்வாய்க்கிழமை (14) காலை, களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் இடம்பெற்றது. அஹதியா பாடசாலையின் அதிபர் அல்ஹாஜ் சிராப் முபஸ்சிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார். இதன்போது, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தவிசாளர் உவைஸ் முஹம்மட், ஹைதராபாத் KIMS வைத்தியசாலையின் பொதுமுகாமையாளர் சுனில் தெஹ்ரி, களுத்துறை நகரசபையின் முன்னாள் தவிசாளர் ஆமிர் நாசிர், களுத்துறை உதவி…
இலங்கையின் மூத்த உலமாவும் புத்தளம் காசிமியா அரபுக் கல்லூரியின் முன்னாள் அதிபருமான அப்துல்லா மஹ்மூத் ஆலிம் அவர்களின் மறைவு, ஆன்மீகத் துறையில் பெரும் இடைவெளியினை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அன்னாரின் உயர் சுவன வாழ்வுக்காக பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார். மர்ஹூம் அப்துல்லா மஹ்மூத் ஆலிம் அவர்களின் மறைவு தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “ஆன்மீக சமூகத்தை உருவாக்குவதற்காக அப்துல்லா…
இன்றைய தினம் தைப்பொங்கள் பண்டிகையை கொண்டாடும் மரியாதைக்குரிய தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய தைபொங்கல் நல்வாழ்த்துக்கள்..!
மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம நேர்மையான, தைரியமான ஒரு அரசியல்வாதி – தலைவர் ரிஷாட்! மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம நேர்மையான, தைரியமான ஒரு அரசியல்வாதி என்றும் கோட்டா மக்கள் சேவைக்கு பொருத்தமற்றவர் என அவர்தான், ஆரம்பத்திலேயே அடையாளங்கண்டவர் எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இன்றைய தினம் (10) நாடாளுமன்றத்தில், மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான, அனுதாபப் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டது….
– மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் சபையில் கோரிக்கை! சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளித்து, மியன்மார் ரோஹிங்கிய அகதிகள் விவகாரத்தில், மனிதாபிமான ரீதியில் செயற்படுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் உயர் சபையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்றில் இன்றையதினம் (09) உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, “நாட்டு மக்கள் பாரிய எதிர்பார்ப்புடன் இந்த அரசாங்கத்தை கொண்டுவந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டியது அரசின் பொறுப்பாகும். 75 வருடங்களாக, பாரம்பரிய கட்சிகள் செய்த…
பிரதம அதிதியாக Dr.ஹில்மி மஹ்ரூப் பங்கேற்பு! முள்ளிப்பொத்தானை, புஹாரி பாலர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா, மிகச் சிறப்பாக இடம்பெற்றது. பிரதம ஆசிரியை சவ்ஜானா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் கிண்ணியா நகர சபையின் முன்னாள் மேயருமான Dr.ஹில்மி மஹ்ரூப் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, விழாவினை சிறப்பித்திருந்தார்.
தாஹிர் எம்.பி சபையில் கோரிக்கை! பிரதேச செயலகங்களில் அறவீடு செய்யப்பட்டு வரும் வாகன வருமான வரி கட்டணங்களில், ஒரு பகுதியளவேனும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர் புதன்கிழமை (08) பாராளுமன்றில் உரையாற்றும் போது கேட்டுக்கொண்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், “உள்ளூராட்சி மன்றங்களானது வீதிகள், வடிகான்கள், பொதுச் சந்தைகள், களியாட்ட இடங்கள், மைதானங்கள், மயானங்கள், நூலகங்கள், திண்மக் கழிவகற்றல் போன்ற பல்வேறு சேவைகளை மக்களுக்காக வழங்கி…
கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நோன்பு காலத்தில் வருவதால், முஸ்லிம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். அதனால், அரசாங்கம் இதுதொடர்பில் கருத்திற்கொண்டு, பரீட்சை நேர அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான M.I.முத்து முஹம்மட் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (07) இடம்பெற்ற, வருட ஆரம்ப நிதிநிலை தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு, தனது கன்னி உரையை ஆற்றுகையிலேயே, மேற்கண்டவாறு தெரிவித்தார்….
இலங்கையில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கியர்கள் தொடர்பில், சர்வதேச சட்டத்துக்கு அமைய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தலைவர் ரிஷாட் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்! கடந்த டிசம்பர் மாதம் இலங்கையில் தஞ்சமடைந்துள்ள மியன்மார் நாட்டின் ரோஹிங்கியா அகதிகள் தொடர்பில், சர்வதேச சட்டத்துக்கு அமைய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். மேற்படி கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, (கடிதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு) கௌரவ ஜனாதிபதி அவர்களுக்கு, இலங்கையில் புகலிடம் கோரி வரும் ரோஹிங்கியா…
வெலிகம, ரிம்ஸா முஹம்மத் எழுதிய ‘பிஞ்சு மனம்’ சிறுகதை நூல் வெளியீட்டு விழா, ஞாயிற்றுக்கிழமை (05) கொழும்பு, தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார்.
ஏறாவூர், ஓட்டுப்பள்ளி பிரதேச முக்கியஸ்தர்களுடனான சினேகபூர்வ சந்திப்பொன்று ஞாயிற்றுக்கிழமை (05) இடம்பெற்றது. இவ் ஒன்றுகூடல் நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான M.S.S. அமீர் அலி மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினரும் கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சருமான M.S. சுபைர் உள்ளிட்ட பிரதேச முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உள்ளூராட்சி மன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது குறித்தும் விரிவாக ஆராய்வு! அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட முக்கியஸ்தர்களுடனான சந்திப்பொன்று, கட்சியின் உயர்பீட உறுப்பினரும் அனுராதபுர மாவட்டத் தலைவருமான A.R.M.தாரிக் ஹாஜியாரின் தலைமையில் இடம்பெற்றது. ஞாயிற்றுக்கிழமை (05), அவரது இல்லத்தில் இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலில், கட்சியின் முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள், பிரதேசவாசிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர். எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், அனுராதபுரம் மாவட்டத்தில் எவ்வாறு கட்சியின் செயற்பாடுகளை அமைத்துக்கொள்வது மற்றும் எதிர்காலத்தில் கட்சியின் முன்னெடுப்புக்கள் எவ்வாறு…
வவுனியா, புதிய சாளம்பைக்குளம் றவ்ழத்துல் ஜன்னா முன்பள்ளி மற்றும் சாளம்பைக்குளம் அல் அக்ஸா முன்பள்ளி ஆகியவற்றின் வருடாந்த பரிசளிப்பு விழாக்கள் ஞாயிற்றுக்கிழமை (05) இடம்பெற்றன. மழலைகளின் கலை நிகழ்வுகளுடன் ஆரம்பமான இவ் விழாக்களில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான முத்து முஹம்மட் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்ததுடன், சிறார்களுக்கான பரிசில்களையும் வழங்கி வைத்தார்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட எம்.டீ.எம்.முஸம்மில் அவர்களுக்கு, வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு, சனிக்கிழமை (04) கல்கமுவ, வல்பாலுவ பகுதியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், குருநாகல் மாவட்ட அமைப்பாளரும் ஓய்வுபெற்ற அதிபருமான எம்.டீ.எம்.முஸம்மில், கட்சியின் உயர்பீட உறுப்பினர்களான இர்பான், அஷார்டீன் மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அஷாட் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள், ஊர்ப்பிரமுகர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிண்ணியா, பெரியாற்றுமுனை அல் முனவ்வரா பாலர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா, சனிக்கிழமை மிகச் சிறப்பாக (04) இடம்பெற்றது. இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் கிண்ணியா நகர சபையின் முன்னாள் மேயருமான Dr.ஹில்மி மஹ்ரூப் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறார்களுக்கான பரிசில்களை வழங்கிவைத்தார். இதன்போது, கிண்ணியா பிரதேச செயளாலர் ஜனாப் கனி மற்றும் முக்கியஸ்தர்களும் விழாவில் கலந்து சிறப்பித்திருந்தனர்.
பிரதம அதிதியாக புத்தளம் மாவட்ட அமைப்பாளர் N.T.M.தாஹிர் பங்கேற்பு! புத்தளம், கரைத்தீவு “ரிஷாட் பதியுதீன்” முன்பள்ளியின் வருடாந்த பரிசளிப்பு விழா, சனிக்கிழமை (04) முன்பள்ளி வளாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான N.T.M.தாஹிர் மற்றும் கட்சியின் கரைத்தீவு உறுப்பினர் ஷிபான் உட்பட முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர்.
நிந்தவூர் பிரதேச சபையின் பராமரிப்பில் இயங்கிவரும் அல் – ஹிக்மா முன்பள்ளி பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா, பாடசாலை வளாகத்தில் (04) இடம்பெற்றது. நிந்தவூர் பிரதேச சபை செயலாளர் எஸ்.ஷிஹாபுத்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு விழாவினை ஆரம்பித்து வைத்தார். அத்துடன், போட்டியில் பங்குபற்றிய மாணவர்களுக்கான பரிசில்களையும், விடுகை பெற்று செல்லும் மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பரிசில்களையும் வழங்கிவைத்தார். இதன்போது,…
மிக நீண்ட வரலாற்றைக்கொண்ட குருநாகல், வாரியப்பொல நகர பள்ளிவாசல் நிர்மாணிப்புப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா, வெள்ளிக்கிழமை (03) பள்ளிவாசல் நிர்வாக சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. சுபஹ் தொழுகையுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில், மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாநகர சபை முன்னாள் உறுப்பினர் அஷார்தீன் மொய்னுதீன் விஷேட அதிதியாகப் பங்கேற்றிருந்ததுடன், ACJU உப தலைவர் உமர்தீன் மௌலவி, ஹிதாயத்துல்லாஹ் மௌலவி உட்பட உலமாக்கள், வாரியப்பொல ஜமாஅத்தினர், தனவந்தர்கள், ஊர்ப் பிரமுகர்கள் எனப் பலரும் சமூகமளித்திருந்தனர். பல வருடங்களாக, இப்…
வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம், பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில், இன்று (02) மாவட்ட செயலகக் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில், மக்கள் காங்கிரஸின் பிரதித் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான முத்து முஹம்மட் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர் சரத் சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் திரேஷ் குமார் உட்பட பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், பாதுகாப்புத் துறை அதிகாரிகள், அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
நிந்தவூர் ஜாமிஉத் தௌஹீத் ஜும்ஆ பள்ளிவாசல் நிருவாகத்தினர் மற்றும் இஸ்வா பள்ளிவாசல் நிர்வாகத்தினர் ஆகியோருக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிருக்குமிடையிலான சந்திப்பொன்று, புதன்கிழமை (01) குறிப்பிட்ட பள்ளிவாசல்களில் இடம்பெற்றது. மேற்படி சந்திப்புகளின் போது, நிந்தவூரின் மத்திய நிர்வாகக் கட்டமைப்பின் முக்கியத்துவம், மார்க்க ரீதியான எதிர்கால செயற்திட்டங்கள் மற்றும் ஊரின் அபிவிருத்திகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இந்த சந்திப்புக்களில், கட்சியின் நிந்தவூர் மத்திய குழு தலைவரும் முன்னாள் பிரதேச சபை…
புத்தளம் பெரிய பள்ளிவாசலின் முன்னாள் தலைவரும் முன்னாள் கிராம அதிகாரியும் சிறந்த சமூக சேவையாளருமான அல்ஹாஜ் பீ.எம்.ஜனாப் அவர்களின் மறைவு தொடர்பில், தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அன்னாருக்கு இறைவன் ஜென்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவன வாழ்வை நல்கப் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார். மர்ஹூம் பீ.எம்.ஜனாப் அவர்களின் மறைவு குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “புத்தள வரலாற்றில், 1990ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலப்பகுதியானது…
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி M.S.S.அமீர் அலியின் வேண்டுகோளை ஏற்று, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நௌஸர் பௌஸியினால், மட்டக்களப்பு, மஜ்மா நகர் பிரதேச மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. மஜ்மா நகர் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் சமீமின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந் நிகழ்வில், பிரதேசத்தின் பயனாளிகள் மற்றும் முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் சாளம்பைக்குளம் பிரதேசக் கிளைக்கும், மக்கள் காங்கிரஸின் பிரதித் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான M.I.முத்து முஹம்மட் ஆகியோருக்கிடையிலான சினேகபூர்வ சந்திப்பொன்று, நேற்று (29) பாராளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் இடம்பெற்றிருந்தது. இக்கலந்துரையாடலில், பிரதேசக் கிளையின் தலைவர் அஷ்ஷெய்க் N.P.ஜுனைத் (காஸிமி,மதனி), செயலாளர் அஷ்ஷெய்க் S.M.அப்துல் மஜீத் (காஸிமி), பொருளாளர் அஷ்ஷெய்க் K.றபியுதீன் (பக்ரி) மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதன்போது, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பணிகள், பிரதேசக் கிளையின் செயல்பாடுகள் குறித்து பாராளுமன்ற…
நிர்மாணப் பணிகளை பார்வையிட நேரில் கள விஜயம்! அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் முயற்சியில் புத்தளம், நாகவில்லு பிரதேசத்தின், எருக்கலம்பிட்டி முஸ்லிம் மஹா வித்தியாலத்தில், சுமார் 07 கோடி ரூபா நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்டு வரும், 3 மாடிக்கட்டிடத்தின் நிர்மாணப்பணிகளை தலைவர் ரிஷாட் ஞாயிற்றுக்கிழமை (29) நேரில் சென்று பார்வையிட்டார். மேற்படி விஜயத்தின் போது, வகுப்பறைக் கட்டிட வேலைகளை துரிதப்படுத்துவதற்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்கிய அவர், தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் கீழ், பாடசாலைக்குத் தேவையான…
பிரதம அதிதியாக தாஹிர் எம்.பி பங்கேற்பு! நிந்தவூர் பாத்திமா முன்பள்ளி பாடசாலை நிர்வாகக் குழுவின் தலைவரும் கிராம சேவை உத்தியோகத்தருமான A.R.முஹம்மட் வஸீம் தலைமையில், சனிக்கிழமை (28) நிந்தவூர், வெளவாலோடை மைதானத்தில் இடம்பெற்ற முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். இந்நிகழ்வில், விசேட அதிதியாக கல்முனை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் U.L.M.சாஜித், கௌரவ அதிதிகளாக பதில் நீதிபதி A.M.நஸீல், சட்டத்தரணி A.L.றியாஸ் ஆதம், அட்டாளைச்சேனை ஆசிரியர்…
வவுனியா பிரதேச செயலக அபிவிருத்தி குழுக் கூட்டம் மற்றும் வவுனியா வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி குழுக் கூட்டம், அபிவிருத்திக் குழுத் தலைவர் உபாலி சமரசிங்க தலைமையில் இன்று (27) நடைபெற்றது. மேற்படி கூட்டங்களில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான முத்து முஹம்மட் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க அதிகாரிகள், பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
“இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் மூளையாக பிரகாசித்த கலாநிதி மன்மோகன் சிங், இலங்கையின் பல்துறை அபிவிருத்திக்கு கைகொடுத்த ஒருவர், அவரது இழப்பு கவலைக்குரியது” என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். பாரதத்தின் முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கின் மறைவு தொடர்பில், அவர் வெளியிட்டுள்ள அனுதாப அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, “கலாநிதி மன்மோகன் சிங், 2004 முதல் 2014 வரையான காலப்பகுதியில் 13ஆவது இந்தியப் பிரதமராகப் பணியாற்றியுள்ளார். 1991இல் நிதி…
நிந்தவூர் பிரதேச அகில இலங்கை ஐம்இய்யதுல் உலமா சபையினருக்கும், மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர் எம்.பிக்குமிடைடையிலான சந்திப்பொன்று, (26) மஸ்ஜிதுல் ஹக் பள்ளிவாசலில் இடம்பெற்றிருந்தது. இதன்போது, உலமா சபையினால் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற தஃவா பணியினை பாராட்டி பேசியிருந்த பாராளுமன்ற உறுப்பினர், ஊரின் மத்திய நிர்வாகக் கட்டமைப்பொன்றை உருவாக்குவது மற்றும் போதை மருந்து பாவனையை தடுப்பது குறித்தும் உலமாக்களுடன் விரிவாகக் கலந்துரையாடியிருந்ததுடன், எதிர்காலத்தில் உலமாக்களின் ஒத்துழைப்புக்களையும் வேண்டியிருந்தார். இந்நிகழ்வில், கட்சியின்…
சமூகம் சார்ந்த அதிகூடிய சிந்தனையினை சதாவும் கொண்டிருந்த கிழக்கிலங்கையின் கல்விப் பொக்கிஷமான பேராசிரியர் அல்ஹாஜ் எம்.இஸ்ஹாக் அவர்களின் மறைவு ஆழ்ந்த கவலையை அளிப்பதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அன்னாரின் ஜென்னதுல் பிர்தௌஸ் சுவன வாழ்வுக்காக தாம் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார். மர்ஹூம் இஸ்ஹாக் அவர்களின் மறைவு தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் கூறியுள்ளதாவது, “தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கான பொறியியல்பீடத்தின் உருவாக்கத்திற்கு பெரும் பங்காற்றியதுடன், சிறந்த கல்வியியலாளர்களின் அவசியம் தொடர்பில்…
வவுனியா, தெற்கு பிரதேச செயலக அபிவிருத்தி குழுக் கூட்டம், பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் (26) இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான முத்து முஹம்மட் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சாளைம்பைக்கேணி 01ஆம், 05ஆம் கொலனி (அமீர் அலி மைதானம்) பிரதேச மக்கள், மிக நீண்டகாலமாக குடிநீர் பெறுவதில் பல அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்தனர். இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக குழாய் கிணறை புனரமைத்து பாவனைக்கு உதவும் வகையில், செயற்படுத்த அதிக பிரயத்தனம் மேற்கொண்டு வந்தனர். அந்த வகையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளரும், மயோன் சமூக சேவை அமைப்பின் தலைவருமான றிஸ்லி முஸ்தபாவின் கவனத்திற்கு இப்பிரச்சினை கிராமவாசிகளால் முன்வைக்கப்பட்டது. மக்களின் அத்தியாவாசிய தேவை…
வவுனியா, செட்டிக்குளம் பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டம் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் இன்று (26) இடம்பெற்றது. செட்டிகுளம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இக் கூட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான முத்து முஹம்மட், தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன், பிரதேச செயலாளர் திருமதி சுலோஜனா மற்றும் அரச அதிகாரிகள், கிராம அலுவலர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம மட்ட…
பேராசிரியர் இஸ்ஹாக் அவர்களின் மறைவுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர் அனுதாபம் தெரிவித்துள்ளார் அவர் தனது அனுதாப அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, “இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் இஸ்ஹாக் (இஸ்ஹாக் ஹாஜியார்) அவர்கள், புனித மக்கா நகரில் வபாத்தானார் என்ற கவலை மிக்க செய்தியோடு இந்த நாள் நகர்கின்றது. தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருந்து, நிந்தவூருக்கும் தென்கிழக்கு அழகிற்கும் தனித்துவ அடையாளமாக மிளிர்ந்தவர். பல்வேறு உயர்பதவிகளை உலகின் பல்வேறு…
சுனாமி பேரலையின் 20ஆம் ஆண்டு நிகழ்வு, இன்று (26) காலை வவுனியா, பூந்தோட்டம், சுனாமி நினைவுத் தூபி முற்றத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தவிசாளருமான முத்து முஹம்மட் மற்றும் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான திலகநாதன், ஜெகதீஸ்வரன் உட்பட சர்வமத பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
சமத்துவம், சகோதரத்துவம், ஈகை ஆகிய மனிதநேய பண்புகளின் விழாவாக, அன்பைப் பரிமாறி, ஏழை எளியோர்களுக்கு உதவும் திருநாள் தினமான இன்று அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.
சமாதானம், புரிந்துணர்வு என்பனவற்றைத் தோற்றுவிக்கும் தினமாக, இன்றைய கிறிஸ்மஸ் பண்டிகை அமைய வாழ்த்துவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடும் மக்களுக்கு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மானிட சமூகமானது ஒவ்வொருவர் மீதும் அன்புடனும் இரக்க குணத்துடனும் வாழ்தல் என்ற பிரதான கட்டமைப்பினைக்கொண்டதாகும். இதனை, அனைத்து மதங்களும் வலியுறுத்தி நிற்கும் வேளையில், கிறிஸ்தவ சகோதர சமூகமும் இந்த…
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட (24) பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர், வைத்திய அத்தியட்சகர் டொக்டர் டீ.பிரபாசங்கரை சந்தித்துக் கலந்துரையாடினார் இதன்போது, சம்மாந்துறை பிரதேசத்திற்கான அரச ஒசுசல ஒன்றின் தேவை குறித்து கலந்துரையாடியதுடன், வைத்தியசாலையின் தேவைகள் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர் கேட்டறிந்துகொண்டார். இந்நிகழ்வில், சம்மாந்துறை பிரதேச முன்னாள் தவிசாளரும் கட்சியின் அரசியல் அதிகாரபீட உறுப்பினருமான ஐ.எல்.எம்.மாஹிர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியக செயலாளர் எஸ்.முஹம்மட் அலி ஜின்னா உட்பட வைத்தியசாலையின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
சம்மாந்துறை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (24) ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.ஆதம்பாவா தலைமையில், பிரதேச செயலகக் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. இதன்போது சம்மாந்துறை பிரதேசத்திற்கான அரச ஒசுசல ஒன்றினை நிறுவுதல், கல்முனை பஸ் டிப்போவுடன் சம்மாந்துறை பஸ் டிப்போவினை மீண்டும் சம்மாந்துறையில் நிறுவுதல் போன்ற விடயங்கள் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிரினால் முன்மொழியப்பட்டு கலந்துரையாடப்பட்டிருந்தது. இவ் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் சம்மாந்துறை பிரதேச நீர்பாசன பிரச்சினைகள், சம்மாந்துறை வைத்தியசாலை காணி…
பிரதம அதிதியாக தாரிக் ஹாஜியார் பங்கேற்பு! அனுராதபுரம், நாச்சியாதீவு அல் – ஹிகம் அரபுக் கல்லூரியின் 02வது (அல் ஹாபிழ், அல் ஆலிம்) பட்டமளிப்பு விழா, ஞாயிற்றுக்கிழமை (22) கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில், பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதிப் பொருளாளரும் அனுராதபுர மாவட்ட அமைப்பாளருமான A.R.M.தாரிக் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் மற்றும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம ஆகியோருக்கிடையிலான சினேகபூர்வ சந்திப்பொன்று, திங்கட்கிழமை (23) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, அம்பாறை மாவட்டத்தில், கடந்த வெள்ள அனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கான நஷ்டஈடுகளை வழங்குவது தொடர்பில் தாஹிர் எம்.பி கேட்டறிந்துகொண்டார். இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புக்கள் தொடர்பில் மதிப்பீடு செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடுகளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை தான் மேற்கொண்டுள்ளதாகவும், அதற்கான நிதியொதுக்கீடுகள் அரசாங்கத்திடமிருந்து கிடைக்கப்பெற்றதும், முறையாக பகிர்ந்தளிப்பதற்கு தயாராக…
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் (முன்னைய அரசாங்கத்தின்) பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து, புத்தளம், அஷ்ரப் ஞாபகார்த்த பூங்காவுக்கு, சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியில், விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. சிறுவர் பூங்காவின் விளையாட்டு செயற்பாடுகளுக்கான உபகரணங்கள் சேதமடைந்திருந்த நிலையில், அவற்றை சீர்செய்ய வேண்டியதன் அவசியம் தொடர்பில், கட்சியின் புத்தளம் மாவட்ட செயற்குழுவினால், தலைவர் ரிஷாட் பதியுதீனிடம் எத்திவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தலைவரின் விசேட பணிப்புரையின் கீழ், மேற்படி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது….
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் (முன்னைய அரசாங்கத்தின்) பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து, முன்னாள் நகரசபை பிரதித் தலைவரும் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான AO அலிகானின் வேண்டுகோளின் பேரில், புத்தளம் GAZZELES விளையாட்டுக் கழகத்திற்கு, விளையாட்டு உபகரணங்கள் (20) வழங்கி வைக்கப்பட்டது. கட்சியின் உயர்பீட உறுப்பினர்களான M.H.முஹம்மத் மற்றும் AO அலிகான் ஆகியோரினால், கழக உறுப்பினர்களிடம் இவ் உபகரணங்கள் கையளிக்கப்பட்டன.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர் வைத்தியர்.ஹில்மி மஹ்ரூபுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு, சனிக்கிழமை (21) கிண்ணியாவில், அவரது இல்லத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் உட்பட கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.
முல்லைத்தீவு, முள்ளிவாய்கால் மேற்கு கடற்கரைப் பகுதியில், மியன்மாரில் இருந்து சுமார் 115 ற்கு மேற்பட்ட அகதிகள், கடந்த வாரம் கரையொதுங்கியதையடுத்து, அவர்கள் திருகோணமலை அஷ்ரப் இறங்குதுறைக்கு கொண்டுசெல்லப்பட்டு பின்னர், திருகோணமலை ஜமாலியா பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். குறித்த, மியன்மார், ரோஹிங்யா அகதிகளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் பராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் ஆகியோர், சனிக்கிழமை (21) திருகோணமலை, ஜமாலியா பாடசாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். அடிப்படை வசதிகள் கூட…
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் (முன்னைய அரசாங்கத்தின்) பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து, புத்தளம் அல் மதரஸதுல் நபவியாவுக்கு சுமார் 2 இலட்சம் ரூபா பெறுமதியான கதிரைகள், ஸ்மார்ட் TV (LED) மற்றும் சவுண்ட் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட செயற்குழுவினால், மதரஸாவின் வருடாந்த பரிசளிப்பு விழாவின்போதே மேற்படி உபகரணங்கள், உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன. இந்நிகழ்வின், விசேட அதிதியாக வைத்தியர் திருமதி.திபாயா பங்கேற்றிருந்ததுடன், மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்களான…
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் முழக்கம் ஏ.எல்.அப்துல் மஜீத்தின் மறைவு, அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களுக்கு பேரிழப்பாகும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, “சிறந்த மேடைப் பேச்சாளரும் சமூகப்பற்றுள்ளவருமான அப்துல் மஜீத், மக்களுடன் அன்பாகக் பழகக்கூடிய மனிதநேயம் கொண்டவர். இணைந்த வடகிழக்கு மாகாண சபையில், எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்த அவர், மக்களின் தேவையறிந்து துணிச்சலுடன் கருமமாற்றியவர். கட்சி, பிரதேச, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் அனைவரையும் மதித்து, மக்கள் பணியாற்றியவர். அன்னாரின் மறைவினால் துயறுற்றிருக்கும் அவரது…
மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் எஸ்.எம்.சபீஸ்! ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயத்தை தொடர்ந்து, நாடு பூராகவும் புரையோடிப்போன பிரச்சினைகளுக்கு சமஷ்டி தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்த வண்ணமுள்ளது. எமது நாட்டில் தீர்க்கப்படாமல் பல பிரச்சினைகள், பல தசாப்தங்களாக தேங்கிக் கிடக்கிறது. அவற்றுக்கு ஒரு தீர்வுப் பொறி முன்வைக்கப்பட வேண்டுமென்றால், அரசாங்கத்துடன் தமிழர் தரப்பும், முஸ்லிம் தரப்பும் ஒரே மேசையில் இருந்து பேசித் தீர்க்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட…
சமூகங்களை சீண்டும் செருக்குத்தனத்தில் செயற்பட்டால் கோட்டாவின் நிலையே ஏற்படும்; கல்விச் சான்றிதழ்களை பரீட்சித்துப் பார்க்கும் பாராளுமன்றமாகச் செயற்படாமல், அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்த மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் சபையாகச் செயற்பட வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (18) உரையாற்றிய அவர் கூறியதாவது, “எழுபது வருட அரசியல் கலாசாரத்தை மாற்றுவதற்கே, தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வாக்களித்தனர். இதை விடுத்து, எம்.பிக்களின் கல்வித்தகைமைகளை…
மாகாண சபை முறைமை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகள் மற்றும் மாகாண சபை அதிகாரங்கள் குறித்து, அம்பாறை, நிந்தவூரில் உள்ள அவரது அலுவலகத்தில், இன்று (18) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே, மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், “ஒன்பது மாகாணங்களில் மாகாண சபைகள் தற்போது இயங்கி வருகின்றன. இந்த மாகாண சபையானது, மக்களுக்கான பணிகளை செய்வதற்கும், மக்களுக்கான வேலைத்திட்டங்களை இலகுபடுத்துவதற்கும், இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தின் மூலமாக, வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ், முஸ்லிம் மக்களுக்காக…
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் (முன்னை அரசாங்கத்தின்) பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டில், கட்சியின் அரசியல் அதிகாரபீட உறுப்பினரும் குருநாகல் மாவட்ட அமைப்பாளருமான முஸம்மிலின் வழிக்காட்டலின் கீழ், அல்ஹாஜ் மொய்னுதீனின் வேண்டுகோளின் பேரில், இப்/கும்பலங்கை ஹமீதியா முஸ்லிம் மஹா வித்தியாலயத்துக்கு இலத்திரனியல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. கட்சியின் உயர்பீட உறுப்பினரும் முன்னாள் மாநகரசபை உறுப்பினருமான அஷார்தீன் மொய்னுதீனினால், போட்டோகொப்பி இயந்திரம், பிரின்டர் இயந்திரம் மற்றும் Amp, Mic உள்ளிட்ட குறித்த இலத்திரனியல் உபகரணங்கள்,…
10ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள வைத்தியகலாநிதி ஜகத் விக்கிரமரத்னவுக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியுதீன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (17) சபையில் வாழ்த்து தெரிவித்து, உரையாற்றிய அவர் கூறியதாவது, “புதிய சபாநாயகராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்; அதேபோன்று, எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். பெரும்பான்மையைக் கொண்டுள்ள ஒரு அரசாங்கத்தின் சபாநாயகராக…
புதிய பாராளுமன்ற உறுப்பினராக இஸ்மாயில் முஹம்மட் முத்து முஹம்மட் அவர்கள், பிரதி சபாநயகர் முன்னிலையில், இன்று காலை (17) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட கட்சியின் பிரதித் தவிசாளர் முத்து முஹம்மட் அவர்கள், இன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய மக்கள் சத்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக, கட்சியின் பிரதித் தவிசாளர் M.I.முத்து முஹம்மது நியமிக்கப்பட்டுள்ளார். அந்தவகையில், தனக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்க காரணமாக இருந்த, கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட அனைவருக்கும் அவர் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் (முன்னைய அரசாங்கத்தின்) பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து, புத்தளம் 5ஆம் வட்டார அமைப்பாளர் M.M.M.முர்ஷித்தின் வேண்டுகோளின் பேரில், புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலைக்கு ஸ்மார்ட் TV (HD) ஒன்று வழங்கி வைக்கப்பட்டது. அமைப்பாளர் M.M.M.முர்ஷித்தினால், பாடசாலை அதிபர் S.R.M.M.முஹ்ஸி அவர்களிடம் ஸ்மார்ட் TV கையளிக்கப்பட்டது. இதன்போது, பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் இஹ்திஸாம் மற்றும் உறுப்பினர்களும் உடனிருந்தனர்.
அம்பாறை மாவட்ட மக்களின் பிரச்சினைகள், அமைப்பின் எதிர்கால செயற்பாடுகள் குறித்த பல விடயங்களை நோக்காகக்கொண்டு, மயோன் சமூக சேவை அமைப்புக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இன்று வெள்ளிக்கிழமை (13) கொழும்பில் இடம்பெற்றது. மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளரும் மயோன் சமூக சேவை அமைப்பின் தலைவருமான றிஸ்லி முஸ்தபாவின் தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில், அமைப்பின் பொதுச் செயலாளர் சுகையில் ஜமால்டீன் அமைப்பின்…
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய மக்கள் சத்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக, கட்சியின் பிரதித் தவிசாளர் மொஹமட் இஸ்மாயில் முத்து முஹம்மது நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியில் வெற்றிடமாக காணப்பட்ட தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் பதவிக்கு இன்று (12) நால்வரின் பெயர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், மொஹமட் இஸ்மாயில் முத்து மொஹமட் உள்ளிட்ட தெரிவு செய்யப்பட்ட ஏனைய உறுப்பினர்களின் பெயர்களும், தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஐக்கிய…
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின், புத்தளம் மாவட்ட செயற்குழுக் கூட்டம், திங்கட்கிழமை (09) தில்லையடியில் இடம்பெற்றது. கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்து, விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இதன்போது, கடந்த பாராளுமன்றத் தேர்தலில் புத்தளத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களான N.T.M.தாஹிர், M.H.முஹம்மத் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தமை…
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் (முன்னைய அரசாங்கத்தின்) பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து, புத்தளம் – 05ஆம் வட்டார அமைப்பாளர் எம்.எம்.எம்.முர்ஷித்தின் வேண்டுகோளின் பேரில், புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரிக்கு, 430,000 ரூபாய் பெறுமதியில், Smart Class வகுப்பறைகளுக்கான தளபாடங்கள் திங்கட்கிழமை (09) கையளிக்கப்பட்டன. இந்நிகழ்வில், மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் மற்றும் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் புத்தளத்தில் போட்டியிட்ட வேட்பாளர் எம்.எச்.முஹம்மத், 07ஆம் வட்டார அமைப்பாளர் ரஸீன் ஆசிரியர், இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியின் முகாமைத்துவ சபைத் தலைவர்…
பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிரின் அரசியல் பயணத்தில் மிக முக்கிய பங்கு வகித்த நிந்தவூர் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக, இன்றைய தினம் (09) பிரதேச சபைக்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். இதன்போது, பிரதேச சபையின் செயலாளர், முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர். இங்கு கருத்து தெரிவித்த அஷ்ரப் தாஹிர் எம்.பி, “நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இங்கு வந்து நிற்பதற்கு…
பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் மற்றும் நிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எல்.அப்துல் லதீப் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று, இன்று (09) நிந்தவூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, அனர்த்த நிவாரணம், அஸ்வெசும கொடுப்பணவு, பள்ளி நிர்வாக சர்ச்சை மற்றும் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரி விவகாரம் உள்ளிட்ட இன்னோரான்ன விடயங்கள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. குறிப்பாக, எந்தவொரு அரசியல் தலையீடுகளுமின்றி நிந்தவூர் பெரிய பள்ளிவாயல் மற்றும் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரி நிர்வாகத் தெரிவுகளை நடாத்துமாறு, பிரதேச செயலாளர் மற்றும்…
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட செயற்குழுக் கூட்டம், ஞாயிற்றுக்கிழமை (08) உப்புவெளி, சர்வோதயபுர மண்டபத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில், கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டதுடன், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் திருமலை மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர் வைத்தியர் ஹில்மி மஹ்ரூப் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர் வைத்தியர் ஹில்மி முகைதீன் பாவா உட்பட கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வயல் பிரதேசங்களை (08) நேரில் சென்று பார்வையிட்டார் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர். அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்புக்குள்ளான வயல் நிலங்கள், வடிச்சல் வாய்க்கால் மற்றும் சிதைவுகளுக்குள்ளான வீதிகள் போன்றவற்றை நேரில் சென்று கள ஆய்வினை மேற்கொண்டிருந்தார். இதன்போது, குறித்த பிரச்சனைகளுக்கான தீர்வுகள் குறித்து விவசாயிகள், வட்டை விதானைமார் ஆகியோரிடம் கேட்டறிந்து கொண்டதுடன் சிதைவுக்குள்ளாகி வரும் வீதிகளை செப்பனிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக அனுராதபுரத்தில் போட்டியிட்ட ஏ.ஆர்.எம்.தாரிக் ஹாஜியாருக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு, சனிக்கிழமை (07) இடம்பெற்றது. அனுராதபுரம், நாச்சியாதுவவில் உள்ள ஏ.ஆர்.எம்.தாரிக் ஹாஜியாரின் இல்லத்தில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில், கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.
புத்தளத்தில் வாக்களித்த மக்களை சந்தித்த மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்! புத்தளத்து மக்களுக்கான பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை இலகுவாக பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் இருந்த போதும் அதனை இல்லாமல் செய்தவர்கள் 5 சதவீத வாக்குகளை பெற்றுக் கொள்ள முடியாத சிறிய கட்சிகள் போட்டியிட்டமை ,நாம் இவர்களுக்கு வாக்களிக்க வேண்டாமென கேட்டு வந்த போதும்,அவர்களுக்கு மக்கள் வாக்களித்தமையே இப்பிரதிநிதித்துவம் பறிபோனமைக்கு காரணம் என்று தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் இந்த வாக்குகள் குப்பைத் தொட்டிக்குள்…
விசாரணைகளை வலியுறுத்தி மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் சுகாதார அமைச்சருக்கு கடிதம்! மன்னார் பொது வைத்தியசாலையில் தாய், சேய் உயிரிழந்தமை தொடர்பில் பகிரங்கமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென வன்னி மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவை கடிதம் மூலம் கேட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை (19) பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்த இளம் தாய், சேய் மரணங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டியே இந்தக் கடிதத்தை அவர் அனுப்பியுள்ளார்….
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளருமான ரிஷாட் பதியுதீன், இன்று காலை (14) பாராளுமன்றத் தேர்தலுக்கான தனது வாக்கினை பதிவு செய்தார். மன்னார், தாராபுரம், அல் மினா மகாவித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில், அவர் தனது குடும்பத்தினர் சகிதம் வாக்குச் செலுத்தினார். இதன்போது, தாராபுரம் பிரதேச இளைஞர்களினால் தலைவர் ரிஷாட் பதியுதீனுக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது. அதன் பிற்பாடு, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த தலைவர் ரிஷாட் பதியுதீன், “வன்னி…
“மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் மீது கொலை முயற்சி தாக்குதல் மேற்கொண்ட காதர் மஸ்தானின் அடியாட்கள் இன்னும் தலைமறைவாக உள்ளனர்”- ஜனாதிபதி சட்டத்தரணி திசத் விஜயகுணவர்தன தெரிவிப்பு! முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியுதீன் மீது, கொலை முயற்சி தாக்குதல் மேற்கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் அடியாட்கள் இன்னும் தலைமறைவாக உள்ளதாகவும், அவர்கள் மீது இதுவரையில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி திசத் விஜயகுணவர்தன…
கிண்ணியாவில் தலைவர் ரிஷாட்! தேசிய மக்கள் சக்தியின் பலம் நாளாந்தம் நலிவடைந்து வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, ஐக்கிய மக்கள் கூட்டணியில், திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் வைத்தியர் ஹில்மி மஹ்ரூபை ஆதரித்து, சனிக்கிழமை (09) கிண்ணியாவில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து பேசிய அவர்,…
“ஹிஸ்புல்லாஹ், தான் எம்.பி.யாக வேண்டும் என்பதற்காக, எதையும் செய்யக் கூடிய ஒருவர்” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். மட்டக்களப்பில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “ஹிஸ்புல்லாஹ் நொந்து நூலாகிப்போன நேரத்தில், அவரை மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட வைத்து வெற்றிபெற வைத்தோம். வெற்றி பெற்றதன் பின்னர், எங்களுக்குத் தெரியாமலே…
மக்கள் மீது ஒருபோதும் இல்லாத அக்கறை மற்றும் கரிசனைகளை, சிலர் தேர்தல் காலங்களில் வெளிப்படுத்துவது ஏன்? எனக் கேள்வியெழுப்பிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், இவ்வாறு கரிசனை என்ற போர்வையில் சமூகத்தின் காலைவாரிவிட சதி நடப்பதாகவும் தெரிவித்தார். மன்னார், முசலி – கொண்டச்சி பிரதேசத்தில் இன்று (05) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் உரையாற்றிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளருமான ரிஷாட் பதியுதீன் மேலும் தெரிவித்ததாவது,…
விழிப்பூட்டும் பொறுப்பு உலமாக்களுக்கும் உண்டு” – தலைவர் ரிஷாட்! முஸ்லிம் தலைமைகளை அரசியலிலிருந்து ஓரங்கட்டும் சதி முயற்சிகளிலிருந்து சமூகம் விழிப்படைய வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உலமாக் குழுவின் ஏற்பாட்டில், “சிறுபான்மை பிரதிநிதித்துவமும் உலமாக்களின் பங்களிப்பும்” என்ற கருப்பொருளில், வன்னி மாவட்ட உலமாக்களுக்கான மாநாடு, இன்றைய தினம் (03) மன்னாரில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு…
தீபாவளி தினத்தில் தீய எண்ணங்கள் விலகி, நாட்டுக்கு சபீட்சம் கிடைக்கட்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தீபாவளி தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இன்று தீபாவளியைக் கொண்டாடும் சகல தமிழ் சகோதரர்களையும் வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறேன். நரகாசுரன் ஒழிக்கப்பட்ட இத்தினம், கெட்ட எண்ணங்கள் நிலைப்பதை எதிர்க்கிறது. மானிடப்பிறவிகள் மத்தியில், தீய எண்ணங்களை உருவாக்கும் எந்த சக்திகளும் நிலைக்காது. இந்த யதார்த்தத்தை உணர்த்தும் வகையில் இத்தினம் அமைந்துள்ளது. …
மஸ்தானின் செயற்பாடுகள் கீழ்த்தரமானவை”- தலைவர் ரிஷாட் தெரிவிப்பு! அரசியலில் நிலைப்பதற்காக மக்களுக்கு வரும் அபிவிருத்திகளைக் கூட தடைசெய்யும் வக்கிர மனநிலையில், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் செயற்பட்டதை மறக்க முடியாதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை (29) மன்னார், தாராபுரத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது, “நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் முன்னாள் எம்.பி.க்கள் 80 பேர்…
காத்தான்குடி மக்களிடத்தில் செல்வாக்கிழந்து பலவீனமடைந்துள்ள கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா ஏறாவூர் எல்லைக் கிராமங்களில் பொய்களைக்கூறி வாக்குகளை சூறையாட முயற்சித்து வருகிறார் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, ஐக்கிய மக்கள் கூட்டணியில், மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளரும் கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரூமான எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார். ஹிஸ்புல்லாவின் மோசமான அரசியல் செயற்பாட்டிலிருந்தும், ஏறாவூர் மண்ணையும் மக்களையும் பாதுகாப்பதற்கு, ஊரின் சிரேஷ்ட அரசியல் தலைவர்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்….
பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியால் தனித்து ஆட்சியமைக்க முடியாதென்ற செய்தியை, எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியாவில், ஞாயிற்றுக்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், மேலும் கூறியதாவது, “எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் முடிவுகள், பல படிப்பினைகளைச் சொல்கின்றன. அரசாங்கத்தின் எழுச்சி எதிர்பார்த்த அளவு அதிகாரிக்காது என்பது முதலாவது. சாத்தியமாகாதவற்றை கூறிவிட்டு, செய்ய…
வடபுல மக்களுக்கு அடைக்கலமளித்த புத்தளம் மாவட்டத்தின் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்பதில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கரிசனையுடன் செயற்பட்டு வருவதாக, கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய மக்கள் கூட்டணியில், புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களான என்.டி.எம்.தாஹிர் மற்றும் எம்.எச்.முஹம்மத் ஆகியோரை ஆதரித்து, வெள்ளிக்கிழமை (25) அல்-காசிம் சிட்டியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “புத்தளம் மாவட்டத்தின் பிரதிநிதித்துவத்தை வென்றெடுப்பதில், எமது…
அகில இலங்கை மக்கள் காங்கிரஸூக்கு துரோகம் செய்த எவரும் அரசியலில் நிலைக்கப்போவதில்லை, இம்முறை பொதுத் தேர்தல் முடிவுகள் இதனை உண்மைப்படுத்தும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பொத்துவிலில் புதன்கிழமை (23) நடந்த கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட வேட்பாளர் என்.எச்.முனாஸை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிட்டதாவது, “பொத்துவில் பிரதேசத்தில் ஒரு பிரதிநிதித்துவம் அவசியம். இதற்காகவே, பல தடவைகள்…
எதிர்வரும் பொதுத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் எமது கட்சி இரண்டு ஆசனங்களை கைப்பற்றும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் மூன்றாம் இலக்கத்தில் போட்டியிடும் முன்னாள் அரச நிருவாக சேவை உத்தியோகத்தரும், வேட்பாளருமான ஏ.எல்.எம்.சலீம் தெரிவித்தார். சாய்ந்தமருது பிரதேசத்தில், அவரது கட்சி காரியாலயத்தை திறந்து வைத்து (21) மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் தனது உரையில் திகாமடுல்ல மாவட்டத்தில் இம்முறை பல புது முகங்கள் களமிறங்கியிருப்பதால் போட்டித் தன்மையை காணப்படுகிறது….
பலஸ்தீன மக்களின் தலைமைகளை அழித்து, காஸாவை அடக்கியாளும் ஸியோனிஸவாதிகளின் வெறியாட்டம் ஒருபோதும் அமைதியைக் கொண்டுவராதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். ஹமாஸ் அமைப்பின் தலைவரான யஹ்யா சின்வார், இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டமையைக் கண்டித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஓராண்டு ஓடியும் காஸா மக்களின் மன வலிமைகள் உறுதியுடனே உள்ளன. அதிபயங்கரக் குண்டுகளை வீசி, அப்பாவிச் சிவிலியன்களை இஸ்ரேல் கொன்று குவிக்கிறது. மனு தர்மங்களை மீறி,…
பிரதேச விளையாட்டை முன்னேற்ற வேண்டும் என்பதற்காகவும் இளைஞர்களை போதையிலிருந்து பாதுக்காக்க வேண்டுமென்பதற்காகவும் அதிகாரத்தில் இருந்த போதும் அதிகாரத்தை இழந்த போதும் நிதியுதவியளித்து வந்துள்ளோம். கல்குடாவின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட பிரதேச இளைஞர், விளையாட்டுக்கழகங்கள் ஒன்றிணைய வேண்டும் எனவுன் எதிர்வரும் தேர்தல்களில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுமென்றும் ஜக்கிய மக்கள் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். வாழைச்சேனை, இம்ரான்ஸ் விளையாட்டுக்கழகம் நடாத்திய கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் (18) அதிதியாகக் கலந்து கொண்டு…
அப்துல்லாஹ் மஹ்ரூபின் கடந்தகால செயற்பாடுகளுக்கு நன்றி” திருகோணமலை மாவட்டத்தில், நான்கு வருடங்களாக தீர்க்கப்படாதுள்ள பிரச்சிச்சினைகளுக்கு தீர்வுகாணும் களப்பணிகளைச் சிறப்புடன் செய்யும் வேட்பாளர் டொக்டர் ஹில்மி மஹ்ரூப். எனவே, இம்முறை தேர்தலில் அமோக ஆதரவுடன் அவரை வெற்றிபெறச் செய்ய வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய மக்கள் கூட்டணியில், திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் டொக்டர் ஹில்மி மஹ்ரூபை ஆதரித்து,…
அதிக ஆசனங்களைக் கைப்பற்றுவோம் என தலைவர் ரிஷாட் உறுதி! மக்கள் ஆணையின் நம்பிக்கையுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இம்முறை பொதுத் தேர்தலில் இருமுனை வியூகங்களில் களமிறங்கியுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் தனித்தும் வன்னி, புத்தளம், குருநாகல், அநுராதபுரம், மட்டக்களப்பு மற்றும் திருமலை மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தும் வேட்புமனுக்களை இக்கட்சி தாக்கல் செய்துள்ளது. அதிகபட்சம் ஐந்து ஆசனங்களைக் கைப்பற்றும் வியூகம் இம்முறை தேர்தலில் வெல்லப்படும் என்பதே மக்கள் காங்கிரஸ் கட்சியின் எதிர்பார்ப்பாகும். கடந்த பொதுத்தேர்தலிலும் இதே யுக்தியுடன் களமிறங்கிய அகில இலங்கை மக்கள்…
Click Here to Join with ACMC or Register your Membership on All Ceylon Makkal Congress (ACMC) REG.ACMC.lk / இங்கு க்ளிக் செய்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஒன்லையின் படிவத்தை பூத்தி செய்யுங்கள்