Headlines

மத்­ரஸா கற்கைகளை நிறுத்துங்கள்

மத்ரஸா மற்றும் பள்­ளி­வா­சல்­களின் மூல­மா­கவே பயங்­க­ர­வாதம் பலப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. முஸ்லிம் அடிப்ப­டை­வா­தத்தை பலப்­ப­டுத்தும் அனைத்து முஸ்லிம் செயற்­பா­டு­க­ளுக்கும் உட­ன­டி­யாக தடைவிதித்து முஸ்­லிம்­களை கட்­டுப்­ப­டுத்த வேண்டும். இல்­லா­விடின் எந்த முறை­யி­லா­வது இதை நாம் தடுக்­க வேண்டி வரும் என பொது­பல சேனா அமைப்பு தெரிவித்துள்­ளது. முஸ்­லிம்கள் அடிப்படை வாதி­க­ளா­கவும் பயங்­க­ர­வா­தி­க­ளா­கவும் மாறி­வரும்போது நாம் இன­வா­தி­க­ளாக மாறு­வதில் தவறில்லை எனவும் அந்த அமைப்பு குறிப்­பிட்­டது. பொது­பல சேனா அமைப்­பினால் நேற்று நடத்­தப்­பட்ட செய்­தி­யாளர் சந்­திப்­பி­லேயே அதன் அந்த அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார…

Read More

ஹிரு­ணிகா விவ­கா­ரத்தில் நான் தலை­யி­டவில்லை

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹிரு­ணிகா பிரே­மச்­சந்­திர விவ­கா­ரத்தில் நான் எந்த விட­யத்­திலும் தலை­யி­ட­வில்லை. அவ்­வாறு பொலிஸ் விவ­கா­ரத்தில் நான் ஒரு­போதும் தலை­யி­டு­வ­தில்லை என்று அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ண தெரி­வித்தார். எனது சொந்த ஊரில் கூட நான் இவ்­வாறு செயற்­பட்­டது கிடை­யாது. எனது ஆத­ர­வா­ளர்­க­ளுக்கு ஏதா­வது பிரச்­சினை வந்­தாலும் பொலி­ஸாரின் விவ­கா­ரத்தில் நான் தலை­யிடமாட்டேன் எனவும் அவர் குறிப்­பிட்டார். அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற விசேட செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர்…

Read More

இரண்டு மணி நேரத்தில் பொலிஸ் அறிக்கை

நாடளாவிய ரீதியில் எந்த பொலிஸ் பிரிவில் வசிப்பவரும் தொழில் நிமித்தம் வெளி நாடுசெல்லும் நோக்கில் பொலிஸ் அறிக்கைகளுக்கு வாரக்கணக்கில் செலவிடவேண்டிய அவசியம் இல்லை எனவும் அவற்றை இரண்டு அல்லது மூன்று மணி நேரத்துக்குள் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன் தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், வெளிநாடொன்றுக்கு தொழிலுக்கு செல்லும்போது பொலிஸ் அறிக்கை கோரப்படும் அப்போது யாழில் உள்ள ஒருவர் கொழும்புக்கு வந்து கைவிரல் ரேகைகளை…

Read More

650,000 குற்றவாளிகளின் கைவிரல் ரேகைகள்

நாட­ளா­விய ரீதியில் நீதி­மன்­றங்­களால் குற்­ற­வா­ளி­க­ளாக தீர்ப்­ப­ளிக்­கப்­பட்ட 6 இலட்­சத்து 50 ஆயிரம் குற்­ற­வா­ளி­களின் கை விரல் ரேகை அடை­யா­ளங்கள் குற்றப் பதிவுப் பிரிவில் (சி.ஆர்.டி) சேமிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவை குற்ற விசா­ர­ணைக்கு பயன்­ப­டுத்­த­வென நாட­ளா­விய ரீதியில் விரிவு படுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் குற்றப் பதிவுப் பிரிவு பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் பிரி­யந்த ஜய­கொடி தெரி­வித்தார். கைவிரல் ரேகை ஒத்துப் பார்க்கும் சேவையை நாட­ளா­விய ரீதியில் விஸ்­த­ரிக்கும், குற்ற விசா­ர­ணையின் போது கைது நட­வ­டிக்­கை­களை இல­கு­ப­டுத்தும் வித­மா­கவும் இரு வேறு நட­வ­டிக்­கை­களின்…

Read More

சிறுபான்மை மக்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் தேர்தல் முறைமை அமைய வேண்டும்

சிறுபான்மை மக்களுக்கு அநீதி ஏற்படாத வகையிலான தேர்தல் முறைமை உருவாக்கப்பட வேண்டுமென அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சிறுபான்மை மக்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் தேர்தல் முறைமை அமைய வேண்டும். பிரதான அரசியல் கட்சிகளும் இணைந்து சிறுபான்மை கட்சிகளை இல்லாமல் செய்ய முயற்சிக்கின்றன. இந்த நிலைமை குறித்து அனைத்து சிறுபான்மை கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படும். நாடு முழுவதிலும் பரந்து வாழும்…

Read More

றிஷாத் பதியுதீனின் கரங்களை அனைவரும் பலப்படுத்துவது காலத்தின் கட்டாயம்

இன்றைய சூழ்நிலையில் முஸ்லிம் சமூகத்தில் உள்ள முஸ்லிம் அரசியல் கட்சிகள் இயக்கங்கள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் கரங்களை பலப்படுத்துவது கட்டாயமான சமூகக்கடமையாகும் என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, அண்மையில் நடைபெற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீன், சங்கைக்குரிய ஆனந்த சாகர தொலைக்காட்சி விவாதம் மூலம் அமைச்சர் ரிசாத் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை என நிரூபிக்கப்பட்டிருப்பதுடன் இது விடயத்தில் துணிச்சலாக தனது நியாயமான கருத்துக்களை முன் வைத்த அமைச்சர்…

Read More

குரங்கு ஆப்பிழுத்த கதையாக மாறிய ஆனந்த தேரரின் விவாதம்!

– ஏ.எஸ்.எம்.ஜாவித் – முஸ்லிம் சமுகத்தினை அழிக்கத் துடிக்கும் இனவாதிகளுக்கு அமைச்சர் றிஷாதின் தொலைக்காட்சி மோதல் முஸ்லிம் சமுகத்திற்கு கிடைத்த வெற்றியாகவே மக்களால் நோக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கள் இரவு ஆனந்த தேரர் வில்பத்து விவகாரம் தொடர்பாக அமைச்சர் றிஷாத் பதியுதீனை வீண் வம்புக்கு இழுத்து தகுந்த ஆதாரங்களுடன் அவர் கொடுத்த பதிலடிகள் குரங்கு ஆப்பிழுத்த கதையாக ஆனந்த தேரரை திக்குமுக்காட வைத்ததையும் தெனைத் தாங்கிக் கொள்ள முடியாத தேராத் இனவாதக் கருத்துக்களையும், றிஷாதின் குடும்பங்களையும் இழுத்து சம்பவத்தை…

Read More

கோட்டபாய குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசனை

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்சவை சந்தேக நபராக குறிப்பிடுவது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனை கோரப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீதிமன்ற உத்தரவினை மீறி, லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிற்கு எதிரில் போராட்டம் நடத்தியமை தொடர்பான சம்பவமொன்றில், கோட்டபாயவை சந்தேக நபராக குறிப்பிட முடியுமா என்பது தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனை பெற்றுக் கொள்ளப்பட உள்ளதாக பொலிஸார் நேற்று நீதிமன்றில் அறிவித்துள்ளனர். நீதிமன்ற உத்தரவினை மீறி பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் ஏற்படும் வகையில்…

Read More

வத்திக்கானில் பாப்பரசர் – மைத்திரி சந்திப்பு!

பாப்பரசர் பிரான்சிஸுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (14) வத்திக்கான் விசேட வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கைக்குத் தான் விஜயம் செய்திருந்தபோது தனக்கு வழங்கப்பட்ட வரவேற்பு தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்ட பாப்பரசர், உபசரிப்பும் நற்புறவும் நிறைந்த மக்களையும் இயற்கை அழகையும் கொண்ட ஒரு வளமான நாடு இலங்கை என ஜனாதிபதியிடம் தெரிவித்தார். இலங்கையின் ஐக்கியம் மற்றும் சகவாழ்வுக்காக ஜனாதிபதி முன்னெடுத்துச் செல்லும் நிகழ்ச்சித் திட்டங்களுக்குத் தனது மகிழ்ச்சியை வெளியிட்ட பாப்பரசர், உலகில் இன்று இடம்பெறும்…

Read More

கடந்த அரசாங்கம் நச்சுப் பொருட்கள் கலந்த உரத்தையே வழங்கியது!– அதுரலிய தேரர்

கடந்த அரசாங்கம் நச்சுப் பொருட்கள் கலந்த இரசாயன உரத்தையே மானியமாக வழங்கியது என அதுரலிய ரதன தேரர் நேற்று நாடாளுமன்றில் குற்றம் சுமத்தியுள்ளார். எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உர மானியம் குறைக்கப்பட்டதாக குற்றம் சுமத்துகின்றனர். எனினும் கடந்த அரசாங்கம் இரசாயனக் கலவைகள் அடங்கிய உரத்தையே வழங்கியது. இவ்வாறு வழங்கிய உரத்தின் பாரியளவு வருமானம் வெளிநாடுகளுக்கே சென்றது. இந்த வகை உரங்களில் அதிகளவில் கெட்மியம் மற்றும் ஆசனிக் போன்ற நச்சு இரசாயன பதார்த்தங்கள் காணப்பட்டன. இவை மண்ணின் வளத்தை…

Read More

தெல்தெனியவில் டெங்கு அபாயம்

கடந்த சில­வா­ரங்­க­ளாக மழை பெய்து ஓய்ந்­த­தை­ய­டுத்து கண்டி, தெல்­தெ­னிய பிர­தே­சங்­களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் காணப்­ப­டு­வ­தாக தெல்­தெ­னிய பொது சுகா­தார அதி­கா­ரிகள் அலு­வ­லகம் தெரி­விக்­கின்­றது. இதே­வேளை இரு டெங்கு நோயா­ளர்கள் இப்­பி­ர­தே­சங்­களில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவ்­வ­லு­வ­லக சுகா­தார அதி­கா­ரிகள் தெரி­வித்­த­துடன் இது தொடர்­பாக இப்­பி­ர­தேச மக்­க­ளுக்கு தெளி­வூட்டும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­வ­தா­கவும் தெரி­வித்­தனர். இது இவ்­வா­றி­ருக்க பொது சுகா­தார அதி­கா­ரிகள் வீடுகள் தோறும் வந்து சுற்­றா­டல்­களை பரி­சோ­தனை செய்து வரு­கின்­றனர்.டெங்கு நுளம்­புகள் பரவும் வகையில் வீட்டுச் சுற்­றா­டலை…

Read More

அமெரிக்காவின் அடுத்த கருப்பின ஜனாதிபதி வில் சுமித்?

மென் இன் பிளாக், இண்டிபெண்டன்ஸ் டே போன்ற படங்களில் நடித்து உலக புகழ் பெற்ற நடிகர் வில் சுமித், நான் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட கூடும் என தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில் நடிப்பு, இசை போன்ற துறைகளை தவிர்த்து, வேறு செயல்பாடுகள் மூலமாக தன்னால் உலகிற்கு மிகப் பெரிய பங்களிப்புகளை செய்யமுடியும் என்று தெரிவித்துள்ளார். மேலும் உலகின் பிரபலமான திரை நட்சத்திரமாக இருப்பது என்பது மிகச் சிறிய சாதனைதான் என்று கூறியுள்ள அவர்,…

Read More